புதுக்கோட்டை
புதுக்கோட்டை அருகே அறந்தாங்கி கட்டுமாவடி சாலையில் உள்ள மேலப்பெருங்காடு கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
மேலப்பெருங்காடு கிராமத்தார்கள்,விவேகானந்தர் இளைஞர் பெருமன்றம் முத்தரையர் நலச்சங்கத்தின் சார்பில் நடந்த மாட்டு வண்டி பந்தயத்தில் பெரியமாடு நடுமாடு கரிச்சான்மாடு என 3 பிரிவாக பிரிக்கப்பட்டு 4 பந்தயம் நடந்தது இதில் மாடுகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.புதுக்கோட்டை ராமநாதபுரம் சிவகங்கை திருச்சி தஞ்சாவூர் மாவட்டங்களை சேர்ந்த மாட்டுவண்டிகள் கலந்து கொண்டு போட்டியில் பங்கேற்றது.பந்தயத்தை வண்டி பந்தய ரசிகர்கள் பொதுமக்கள் கண்டு கழித்தனர்.