தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகை உலகமெங்கும் உள்ள இந்தியர்களால் கொண்டாடப்படும் ஒன்று நாளை வர உள்ள தீபாவளி பண்டிகைக்கு துணை முதல்வரும், முதல்வரும் தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் தீபாவளித் திருநாளில் அனைவரது வாழ்விலும் அமைதி தவழட்டும், இன்பம் நிறையட்டும், நலங்களும், வளங்களும் பெருகட்டும் என்று முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
மக்களை பெருந்துன்பத்திற்கு ஆளாக்கிய நரகாசுரன் எனும் அரக்கனை திருமால் அழித்த தினமே தீபாவளிப் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இந்த நாள் இருள் நீங்கி ஒளி மிளிரும் தினமாகவும் தீமைகள் அழிந்து நன்மைகள் சுடர்விட்டு பிரகாசிக்கும் தினமாகவும் மக்களால் கருதப்படுகிறது.
தீபாவளித்திருநாளில் மக்கள் அதிகாலை எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடை அணிந்து தங்கள் இல்லங்களில் தீபங்களை ஏற்றி வளமான வாழ்விற்கு இறைவனை வழிபடுவர். உற்றார் உறவினர்களுக்கு இனிப்புகளை வழங்கி விருந்துண்டு பட்டாசுகளை வெடித்து தீபாவளி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வார்கள்.
இந்த தீபதிருநாளில் அனைவரது வாழ்விலும் இன்பம் பெருகிட இறைவனின் அருள் கிடைக்கட்டும் இன்று பெருகும் இன்பம் அனைவரிடமும் என்றும் நிலைக்கட்டும் தித்திக்கும் இந்த தீபாவளியை மக்கள் அனைவரும் எல்லா வளமும் நலமும் பெற்று இன்புற்று வாழ்ந்திட மனதார வாழ்த்தி அனைவருக்கும் எங்களது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம் என வாழ்த்து கூறியுள்ளனர்.
மாண்புமிகு துணை முதல்வர் திரு. ஓ. பன்னீர்செல்வம், மாண்புமிகு முதல்வர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோரின் 'தீபாவளி' வாழ்த்து செய்தி. pic.twitter.com/Y9znwyCHwi
— AIADMK (@AIADMKOfficial) October 26, 2019