February 11, 2025, 5:47 PM
30.4 C
Chennai

பேரிடர் காலம் வரலாம்… விழிப்புடன் இருக்க வேண்டும்!

பேரிடரும், விபத்தும் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம்; விழிப்புடன் இருங்கள்: அதிகாரிகளுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவுரை

வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு குறித்த முன்னேற்பாடு கூட்டம் மதுரையில் சனிக்கிழமை இன்று காலை நடைபெற்றது.

வருவாய் நிர்வாக ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையில் இக்கூட்டம் நடந்தது. இதில், மாவட்ட ஆட்சித் தலைவர் டி.ஜி.வினய், மாநகராட்சி ஆணையாளர் ச.விசாகன். முன்னிலை வகித்தனர்.

இப்பயிற்சியில் ஒவ்வொரு துறையினரும் கலந்துகொண்டு தங்கள் துறையில் உள்ள பாதுகாப்பு உபகரணங்களையும், வழிமுறைகளையும் காட்சிப் படுத்துவதுடன் அதனை செயலாக்கம் செய்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

பேரிடர் காலங்களில் அசம்பாவிதங்களைத் தவிர்ப்பது குறித்தும், தங்களை பாதுகாப்பது குறித்தும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் தயார் செய்து பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்திப்பட்டது.

நிகழ்ச்சியில் ஜெ.ராதா கிருஷ்ணன் பேசியதாவது: ஒவ்வொரு துறையினரும் பேரிடர் மேலாண்மை குறித்த முன்னேற்பாட்டுத் திட்டங்களை வகுத்து தயார் நிலையில் இருக்க வேண்டும். பயன்பாடு இல்லாத ஆழ்துளை கிணறுகளை மூடுவது தொடர்பான அறிக்கையினை தினந்தோறும் சமர்ப்பிக்க வேண்டும். ஆழ்துளை கிணறுகள், குளங்கள், குட்டைகள், நதிகள், சாக்கடைகள், வாய்க்கால்கள் ஆகிய நீர்நிலைகளில் பொதுமக்கள் அறியும்வண்ணம் எச்சரிக்கை விழிப்புணர்வு பதாகைகள் வைக்க வேண்டும்.

இடர் மற்றும் பேரிடர் எதுவென்பது குறித்து பொது மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். அக்காலங்களில் பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் நமது செயல்பாடுகள் இருக்க வேண்டும்.

பேரிடர் காலங்களில் மக்களின் உயிரைக் காப்பாற்றுவதுதான் நமது முதற் கடமையாகும். பேரிடர், விபத்து யாருக்கு எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம். எனவே நாம் என்றும் தயாராக இருந்தால் எவ்வளவு பெரிய பேரிடர்களையும் தவிர்க்கலாம்.

நாட்டு நலப்பணி மாணவர்கள், தேசிய மாணவர் படை, ஸ்கவுட் மாணவர்கள், நேரு யுவகேந்திரா, ரெட்கிராஸ் என ஆர்வமுள்ள அனைத்து தொண்டு நிறுவனத் தினரையும் பேரிடர் காலங்களில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

பேரிடர் காலங்களில் அனைத்து துறையினரும் குழுவாக இணைந்து பணியாற்ற வேண்டும்… என்று அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் காவல் ஆணையர் டேவிட்சன் தேவஆசிர்வாதம், காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பி. பிரியங்கா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மாறி மாறி விளையாடிக் கொண்டு இருப்பார்கள்..!

நாளைக்கே- "மாநில அரசின் நிர்வாக முடிவுகளில் தலையிட உச்சநீதிமன்றத்துக்கு அனுமதி இல்லை"-

பஞ்சாங்கம் பிப்.11- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

இலவச வேட்டி சேலை திட்டத்தில் வருடந்தோறும் ஊழல் செய்யும் ‘கமிஷன்’ காந்தி: அண்ணாமலை

மிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஆட்சிக்கு வரும்போது, சிறைக்குச் செல்லவிருக்கும் தி.மு.க.,வின் ஊழல் அமைச்சர்களில், காந்தியே முதல் நபராக இருப்பார்

உவரி கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைக்க இந்து முன்னணி எதிர்ப்பு!

நெல்லை மாவட்டம் உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்தியர்களை சங்கிலி கட்டி அனுப்பும் அமெரிக்கா! குடிமக்களை எப்படி நடத்துகிறது இந்தியா?

பல்லாயிர இந்தியர்களை அமெரிக்காவில் பிடித்து வைத்திருக்கிறது அந்நாடு. காரணம்: அவர்கள் அமெரிக்க எல்லைக்குள் அனுமதியின்றி நுழைந்தவர்கள்,

Topics

மாறி மாறி விளையாடிக் கொண்டு இருப்பார்கள்..!

நாளைக்கே- "மாநில அரசின் நிர்வாக முடிவுகளில் தலையிட உச்சநீதிமன்றத்துக்கு அனுமதி இல்லை"-

பஞ்சாங்கம் பிப்.11- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

இலவச வேட்டி சேலை திட்டத்தில் வருடந்தோறும் ஊழல் செய்யும் ‘கமிஷன்’ காந்தி: அண்ணாமலை

மிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஆட்சிக்கு வரும்போது, சிறைக்குச் செல்லவிருக்கும் தி.மு.க.,வின் ஊழல் அமைச்சர்களில், காந்தியே முதல் நபராக இருப்பார்

உவரி கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைக்க இந்து முன்னணி எதிர்ப்பு!

நெல்லை மாவட்டம் உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்தியர்களை சங்கிலி கட்டி அனுப்பும் அமெரிக்கா! குடிமக்களை எப்படி நடத்துகிறது இந்தியா?

பல்லாயிர இந்தியர்களை அமெரிக்காவில் பிடித்து வைத்திருக்கிறது அந்நாடு. காரணம்: அவர்கள் அமெரிக்க எல்லைக்குள் அனுமதியின்றி நுழைந்தவர்கள்,

செங்கோட்டை சிவன் கோயிலில் தைப்பூச தேரோட்டம்; எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி வடம் பிடித்து தொடங்கி வைப்பு!

செங்கோட்டை ஸ்ரீ தர்மஸம்வர்த்தினி அம்பாள்- குலசேகரநாத சுவாமி கோவில் தைத் தேரோட்டம்: அதிமுக எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி தேரை வடம் பிடித்து இழுத்து

திருப்பரங்குன்றத்தில் மீண்டும் மதக் கலவரத்தைத் தூண்ட சதி: இந்து முன்னணி கண்டனம்!

திருப்பரங்குன்றத்தில் மீண்டும் மத கலவரத்தை தூண்ட நினைக்கும் திமுக கூட்டணி கட்சிகளுக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவிப்பதாக, அந்த அமைப்பின்

பஞ்சாங்கம் பிப்.10 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories