March 15, 2025, 10:30 PM
28.3 C
Chennai

விஷவண்டு கடித்து உயிரிழந்த முன்னாள் எம்.எல்.ஏ., உடலுக்கு முதல்வர் அஞ்சலி!

விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள புதுவை மாநில அதிமுக செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவும் ஆன புருஷோத்தமன் உடலுக்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி அஞ்சலி செலுத்தினார்.

விஷவண்டு கடித்ததால் உயிரிழந்த புதுவை அதிமுக செயலாளர் உடலுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் அஞ்சலி செலுத்தினார்.

புதுவை அதிமுக செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான புருஷோத்தமன், நேற்று விழுப்புரம் மாவட்டம் ராதாபுரத்தில் உள்ள தனது விவசாய நிலத்தை பார்வையிட சென்றுபோது விஷ வண்டு கடித்து மயக்கமடைந்தார். பின்னர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த நிலையில் மருத்துவமனை வளாகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்த பின் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் புருஷோத்தமனின் மறைவு புதுச்சேரிக்கு மட்டுமின்றி அதிமுகவிற்கும் பேரிழப்பு என்று தெரிவித்தார்.

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் பதவி வகித்து வந்தவர் முன்னாள் எம்எல்ஏ புருஷோத்தமன். மணவெளியில் வசித்து வந்த இவர், புதுச்சேரி – தமிழக எல்லையான ராதாபுரத்தில் உள்ள தனது விவசாய நிலத்தை பார்வையிட சனிக்கிழமை காலை சென்றுள்ளார்.

அப்போது வயல் வெளியில் சுற்றித்திரிந்த விஷத் தன்மையுள்ள கடந்தை வண்டு புருசோத்தமனை கொட்டியதால் அவர் சிறிது நேரத்தில் மயக்கமடைந்ததாக கூறப்படுகின்றது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் மீட்டு அவரை சிகிச்சைகாக விக்கிரவாண்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். புருஷோத்தமனுக்கு ஜெயலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகன், 5 மகள்களும் உள்ளனர். புருஷோத்தமன் 2014-ம் ஆண்டு முதல் புதுச்சேரி மாநில அதிமுக செயலாளராக பொறுப்பு வகித்தார்.

அரியாங்குப்பம் தொகுதி முன்னாள் எம்எல்ஏவாகவும் பொறுப்பு வகித்துள்ளார். புருஷோத்தமன், மறைந்த விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ ராதாமணியின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடதக்கது.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் வெள்ளி கிழமை மாலை நடை திறக்கப்பட்டது. இன்று காலை பூஜை

வைகை ரயிலுக்கு.. செங்கோட்டையில் இருந்து இணைப்பு ரயில் கிடைக்குமா?

வைகை புறப்பட்டு செல்லும் நேரத்திற்கு முன்னதாக மதுரை செல்லும் வகையில் ரயில் இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

பஞ்சாங்கம் மார்ச் 15 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திமுக.,வின் வழக்கமான ஏமாற்று வேலை: பட்ஜெட் குறித்து அண்ணாமலை விமர்சனம்!

ஒவ்வோர் ஆண்டும், ஒரு நாள் கூத்துக்கு அறிவிப்புகளை வெளியிடுவது, திமுக அரசின் பட்ஜெட் சம்பிரதாயம் ஆகிவிட்டது.

வெறும் குறியீட்டுவாதம் மட்டுமல்ல; பிரிவினைவாத உணர்வைப் பரப்பும் ஆபத்தான மனநிலை!

“இது வெறும் குறியீட்டுவாதம் மட்டுமல்ல - இது இந்திய ஒற்றுமையை பலவீனப்படுத்தி, பிராந்தியப் பெருமை என்ற போர்வையில் பிரிவினைவாத உணர்வைப் பரப்பும் ஆபத்தான மனநிலையைக் குறிக்கிறது.”

Topics

பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் வெள்ளி கிழமை மாலை நடை திறக்கப்பட்டது. இன்று காலை பூஜை

வைகை ரயிலுக்கு.. செங்கோட்டையில் இருந்து இணைப்பு ரயில் கிடைக்குமா?

வைகை புறப்பட்டு செல்லும் நேரத்திற்கு முன்னதாக மதுரை செல்லும் வகையில் ரயில் இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

பஞ்சாங்கம் மார்ச் 15 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திமுக.,வின் வழக்கமான ஏமாற்று வேலை: பட்ஜெட் குறித்து அண்ணாமலை விமர்சனம்!

ஒவ்வோர் ஆண்டும், ஒரு நாள் கூத்துக்கு அறிவிப்புகளை வெளியிடுவது, திமுக அரசின் பட்ஜெட் சம்பிரதாயம் ஆகிவிட்டது.

வெறும் குறியீட்டுவாதம் மட்டுமல்ல; பிரிவினைவாத உணர்வைப் பரப்பும் ஆபத்தான மனநிலை!

“இது வெறும் குறியீட்டுவாதம் மட்டுமல்ல - இது இந்திய ஒற்றுமையை பலவீனப்படுத்தி, பிராந்தியப் பெருமை என்ற போர்வையில் பிரிவினைவாத உணர்வைப் பரப்பும் ஆபத்தான மனநிலையைக் குறிக்கிறது.”

தமிழக பட்ஜெட் 2025: என்ன இருக்கு இதில்?!

வருவாய் பற்றாக்குறை: வரும் நிதியாண்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.41,634 கோடியாக மதிப்பீடு. - இவ்வாறு தமிழக பட்ஜெட்டில் அறிவிப்புகள் இடம்பெற்றன.

மொழியை முன்வைத்து ஒரு கனவுத் திட்டத்தை நசுக்கி தமிழர்களைப் பாழாக்கும் ‘திராவிடர்கள்’!

இப்படிப்பட்ட எதிர்கால வளமைக்கான மாணவர்களைத் தயார் செய்யும் தொழில்நுட்பம், வசதிகள், ஆசிரியர் திறன், திறன் மேம்பாட்டு வசதிகளைப் புறக்கணித்து,

நாகரீகக் கோமாளிகள்!

கொள்ளை அடிப்பதற்காய் திராவிடர் என்போம்; நெருக்கடி என்றுவந்தால் தமிழர் என்போம்!

Entertainment News

Popular Categories