சென்னை :
மாணவர்கள் நடத்தியவரை போராட்டம் அமைதியாக இருந்தது. ஆனால், இப்போது வேறு வேறு அமைப்புகள் உள்ளே வந்துள்ளது என்று ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்களுடன் போராடி வந்த லாரன்ஸ் போராட்டக்காரர்கள் மத்தியில் பேசினார். அப்போது…
‛‛ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு ஏற்பட்டுள்ளதாக சட்டசபையில் கவர்னர் பேசியுள்ளார். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நாம் பெற்ற வெற்றியை கொண்டாடும் நேரமிது . இந்த போராட்டத்தில் மாணவர்கள் மட்டுமே பேச வேண்டும். அரசின் நடவடிக்கையை அலங்காநல்லூர் மக்கள் ஏற்று கொண்டுள்ளனர். நாமும் இதனை ஏற்று கொள்ள வேண்டும். எனவே போராட்டக்காரர்கள் கலைந்து செல்லுங்கள்… என்றார்.
ஆனால் லாரன்ஸின் பேச்சை போராட்டாக்காரர்கள் கேட்க மறுத்துவிட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய லாரன்ஸ்…
‛‛ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்பதே மக்களின் எண்ணம், பாரம்பரிய ஜல்லிக்கட்டை மீட்க வேண்டும் என்பதற்காகவே உதவினேன். என்னுடன் சேர்ந்து பலரும் உணவு வழங்கினார்கள். மாணவர்கள் போராட்டம் நடத்திய வரை ஜல்லிக்கட்டு தான் ஒரே குறிக்கோளாக இருந்தது. ஆனால் இப்போது வேறு சில விஷயங்களை திணிக்கிறார்கள். போராட்ட களத்தில் வேறு வேறு அமைப்புகள் உள்ளே வந்துள்ளது. கோரிக்கைகள் திசைமாறி போனதால் அதிர்ச்சியானேன்” என்றார்.