முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
சேஷன் இந்திய ஆட்சிப்பணி அதிகாரியாக பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தவர். சிறந்த நிர்வாகி, கடின உழைப்பாளி, அனைவரிடமும் அன்பாக பழகும் தன்மையுடையவராகவும் திகழ்ந்தார் சேஷன் என பெருமிதம் தெரிவித்தார்.
அவருடைய குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். சேஷன் அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். என தெரிவித்துள்ளார்.
முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் திரு.டி.என்.சேஷன் அவர்கள் மறைவு – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் இரங்கல் செய்தி #RIPTNSheshan pic.twitter.com/lKKfelmOD6
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) November 11, 2019