
தமிழகத்தில் 5 புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு.
திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்கள் பிரித்தது தொடர்பாகவும் அதில் இடம்பெறக்கூடிய தாலுகாக்கள் தொடர்பாகவும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது
ராணிப்பேட்டை மாவட்டம்: ராணிப்பேட்டை, அரக்கோணம் ஆகிய இரண்டு வருவாய் கோட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாலாஜாபாத், ஆற்காடு, நெமிலி மற்றும் அரக்கோணம் ஆகியவை புதிய வட்டங்களாக செயல்படும்.
வேலூர் மாவட்டம்: புதிதாக வேலூர், குடியாத்தம் என புதிய வருவாய் கோட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. வேலூர், அணைக்கட்டு, காட்பாடி, குடியாத்தம், பேரணாம்பட்டு, மற்றும் கே.பி.குப்பம் ஆகிய 6 வட்டங்கள் வேலூர் மாவட்டத்தில் அடங்கும். வேலூர் மற்றும் குடியாத்தம் இரண்டும் வருவாய் கோட்டங்களாக உருவாக்கப் பட்டுள்ளன.
வேலூரை பிரித்து வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் நெல்லையை பிரித்து நெல்லை, தென்காசி என 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதற்கான அரசாணை வெளியீடு.
காஞ்சிபுரம் மாவட்டம்: காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், என 2 வருவாய் கோட்டம், 5 தாலுகாக்கள் வருகின்றன. காஞ்சிபுரம் மாவட்டத்தை பிரித்து செங்கல்பட்டு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத், குன்றத்தூர் தாலுகாக்கள் காஞ்சிபுரத்தில் வருகின்றன.
செங்கல்பட்டு மாவட்டம்: செங்கல்பட்டு, மதுராந்தகம், தாம்பரம் என 3 வருவாய் கோட்டங்கள் வருகின்றன. செங்கல்பட்டு, தாம்பரம், பல்லாவரம், வண்டலூர், மதுராந்தகம், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், உள்ளிட்ட 8 தாலுகாக்கள் செங்கல்பட்டு மாவட்டத்தில் வருகிறது.
தென்காசி மாவட்டம்: சங்கரன்கோவில், செங்கோட்டை, கடையநல்லூர், சிவகிரி, வி.கே புதூர், திருவேங்கடம், ஆலங்குளம் ஆகிய தாலுகாக்கள் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான அரசு ஆணை வெளியீடு *கள்ளக்குறிச்சி புதிய மாவட்டத்தில் இணைக்கப்பட்ட இரண்டு வருவாய் கோட்டங்கள் அதாவது கள்ளக்குறிச்சி மற்றும் திருக்கோவிலூர் இதில் உள்ளடங்கும் மேலும் 6 தாலுகா அதாவது கள்ளக்குறிச்சி, சின்னசேலம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம் மற்றும் புதிய தாலுகா கல்வராயன்மலை உருவாக்கபட்டுள்ளன ஆகிய 6 தாலுகாவுடன் புதிய மாவட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன
விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், திண்டிவனம் என இரண்டு கோட்டமும், விழுப்புரம், திருவெண்ணைநல்லூர், விக்கிரவாண்டி, கண்டாச்சிபுரம், செஞ்சி, மேல்மலையனூர், திண்டிவனம், வானூர் மரக்காணம் ஆகிய தாலுக்காக்கள் இம்மாவட்டத்தில் உள்ளடங்கியுள்ளது என அரசு தெரிவித்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம்: திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடி ஆகிய இரண்டும் வருவாய் கோட்டங்களாக செயல்படும். திருப்பத்தூர், வாணியம்பாடி, நாற்றாம்பள்ளி மற்றும் ஆம்பூர் ஆகிய 4 இடங்களும் புதிய வட்டங்களாக செயல்படும்.
நெல்லை மாவட்டத்தை பிரித்து நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. நெல்லை மாவட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை, மானூர், நாங்குநேரி, சேரன்மகாதேவி, ராதாபுரம், அம்பாசமுத்திரம், திசையன்விளை ஆகிய தாலுகாக்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.