
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள சீர்தாங்கி கிராமத்தை சேர்ந்தவர் அமலசெல்வி (40).
கூலித்தொழிலாளி கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த இவர், தனது 19 வயது மகளுடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த மாதம் 8-ந்தேதி கட்டிட வேலைக்கு சென்ற அமலசெல்வி அதன் வீடு திரும்பவில்லை.
இதனையடுத்து அவரது உறிவினர்கள் அவரை பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவிலலை. இதனால் அவரின் உறவினர்கள் திருவாடானை போலீசில் புகார் செய்தனர்.

அந்த புகார் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர்.
அப்போது அவருடைய செல்போனில் தொடர்பு கொண்டவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதினர்.
அமலசெல்வியிடம் செல்போனை எடுத்து பார்த்தபோது அவர் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசிய கண்ணங்குடியை அடுத்த சித்தானூரை சேர்ந்த கொத்தனார் கண்ணன் பிடித்து விசாரித்தனர்.

இந்த விசாரணையில் அமலசெல்விக்கும், கொத்தனார் கண்ணனுக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து கண்ணனிடம் விசாரணை செய்தபோது கள்ளத்தொடர்பு குறித்து ஒப்புக்கொண்டார்.
மேலும் இந்த விசாரணையில் கண்ணன் கூறுகையில், அமலசெல்விக்கும் எனக்கும் தொடர்பு இருந்தது.
ஆனால் திடீரென அமலசெல்வி என்னுடன் பழகுவதை அமலசெல்வி தவிர்த்து வந்தார்.
இதனால் நான் மிகவும் மனவேதனை அடைந்தேன் அவர்மீது எனக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

அவரை கொலை செய்ய திட்டமிட்டு கடந்த மாதம் 8-ந்தேதி அவரை தொடர்பு தொடர்புகொண்டு கடைசியாக உன்னுடன் ஒரே ஒரு நாள் மட்டும் நெருக்கமாக இருக்க ஆசைப்படுகிறேன் என்றேன்.
அதற்கு சம்மதித்த அவர், சித்தானூர் காட்டுப்பகுதிக்கு வந்தார். அங்கு நாங்கள் இருவரும் உல்லாசமாக இருந்தோம்.
பின்னர் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்து, பிணத்தை அங்கேயே போட்டுவிட்டு வந்தேன் என தெரவித்துள்ளார்.
இதையடுத்து அவரை திருவாடானை போலீசார் கண்ணனை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.