குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை போராட்டம் நடத்தப் போவதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தார்.
திமுகவுடன் அதன் கூட்டணி கட்சிகளும் போராட்டத்தில் பங்கேற்கும் என்று .தெரிவிக்கப்பட்டது.
குடியுரிமை திருத்த சட்டம் குறித்து தெளிவான விளக்கம் அளிக்கப்பட்ட பிறகும், மக்களின் அமைதியை சீர்குலைக்கவே, திமுக பேரணி நடத்துவதாக மதுரையில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டினார்.
மேலும் “திமுக விரித்த வலையில் சிக்காமல் கமல் தப்பிவிட்டார்” என்றும் அவர் கூறினார்.