தைலாபுரத்தில் கரும்புகளால் அமைக்கப்பட்ட ஜல்லிக்கட்டு திடல் பின்னணியில் பொங்கல் பண்டிகை கொண்டாடியுள்ளார் பாமக., நிறுவுனர் ராமதாஸ், மருத்துவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் குடும்பத்தினர்.
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் தைப்பொங்கல் திருநாளை பாமக., நிறுவுனர் ராமதாஸ் குடும்பத்தினர் சிறப்பாகக் கொண்டாடினர்.
வாடி வாசலில் இருந்து துள்ளி வரும் ஜல்லிக்கட்டு காளைகளை இளைஞர்கள் அடக்குவதை சித்தரிக்கும் வகையில் கரும்புகளால் அமைக்கப்பட்டிருந்த பின்னணியில் பொங்கல் விழா நடைபெற்றது.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அவரது துணைவியார் சரஸ்வது அம்மையார், பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ், பசுமைத்தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி மற்றும் குடும்பத்தினர் இதில் கலந்து கொண்டனர்.