திருச்சி: பெரம்பலூரில் அதிமுக எம்.பி மருதைராஜா மீது ஷேர் ஆட்டோ ஒன்று மோதியதில் அவர் படுகாயமடைந்தார். அவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிமுக.,வைச் சேர்ந்தவரான பெரம்பலூர் தொகுதி எம்.பி., ஆர்.பி.மருதைராஜா(51) பெரம்பலூர் கல்யாண் நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் நடைப்பயிற்சிக்காக, நேற்று காலை தன் மகன் பிரசன்னாவுடன் துறையூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பின்புறம் வந்த ஷேர் ஆட்டோ இருவர் மீதும் மோதியது. இந்த விபத்தில் மருதைராஜாவுக்கு தலையின் பின்பக்கம், கை மற்றும் காலில் படுகாயம் ஏற்பட்டது. பிரசன்னா லேசான காயத்துடன் தப்பினார். உடனே இருவருக்கும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை தரப்பட்டது. பின்னர் இருவரும், மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் இந்நிலையில், ஷேர் ஆட்டோ ஓட்டுநர் செஞ்சேரியைச் சேர்ந்த மணிகண்டன்(29) போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அரியலூர் கல்லங்குறிச்சி கலியபெருமாள் கோயில் திருவிழாவுக்குச் சென்று திரும்பும்போது, ஷேர் ஆட்டோவை ஓட்டி வந்த மணிகண்டன் களைப்பில் கண்ணயர்ந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஷேர் ஆட்டோ மோதி அதிமுக., எம்.பி., படுகாயம்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari