January 23, 2025, 4:52 AM
23.8 C
Chennai

கணவரை சேர்த்து வையுங்கள்: ஈரோட்டில் திருநங்கை போராட்டம்

ஈரோடு: தாலி கட்டிய கணவரை சேர்த்து வைக்கக்கோரி ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கை சிம்ரன் பரபரப்பான புகார் ஒன்றை அளித்துள்ளார். ஈரோடு பழைய ரயில் நிலையம் பகுதியைச் சேர்ந்த திருநங்கை சிம்ரன் (28) ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்திருந்தார். அங்கே மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பொது மக்களிடம் மனுக்களைப் பெற்றுக்  கொண்டிருந்த மாவட்ட வருவாய் அதிகாரி சதீஷிடம் திருநங்கை சிம்ரன் மனு ஒன்றைக் கொடுத்தார். அந்த மனுவில், நான் ஒரு திருநங்கை. எனக்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. இது எங்களுக்குள் காதலாக மாறியது. நாங்கள் பல இடங்களுக்கு சென்று சுற்றி வந்தோம். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ஈரோடு ஆலமரத்து வீதியில் உள்ள முனியப்பன் கோயிலில் வைத்து அவர் எனக்கு தாலி கட்டி திருமணம் செய்துகொண்டார். அவர் கேட்டுக்கொண்டதற்காக நான் எனது உடலில் அறுவை சிகிச்சை செய்துகொண்டேன். நாங்கள் கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்தோம். இந்தநிலையில் எனக்கு தாலி கட்டிய எனது கணவர் என்னை விட்டு பிரிந்து சென்று விட்டார். அவர் வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருக்கிறார். என்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டார். அவரை என்னோடு சேர்ந்து வாழச்செய்ய வேண்டும். எனது கணவரால் நான் நிறைய இழந்து விட்டேன். எனவே எனக்கு நல்ல தீர்வு கிடைக்க வேண்டும். நான் அவரது மனைவி என்ற முறையில் எனக்கு அவர் ஜீவனாம்சம் வழங்கவேண்டும். எனது கணவரின் வீட்டை சேர்ந்தவர்கள் என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார்கள். எனவே எனக்கு நல்ல தீர்வு கிடைக்கச்செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார். அந்த மனுவுடன் திருநங்கை சிம்ரனும் அவருக்குத் தாலி கட்டியதாகக் கூறப்படும் இளைஞரும் சேர்ந்து இருக்கும் புகைப்படங்கள், திருமண மாலையுடன் இருக்கும் புகைப்படங்களையும் அவர் கொண்டு வந்து அதிகாரிகளிடம் கொடுத்தார். இது அதிகாரிகள், மற்றும் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதக் கலவரத்தை தூண்டும் திமுக.,? இந்து முன்னணி கண்டனம்

தமிழகத்தில் மதக்கலவரத்தை தூண்டுகிறதா திமுக. இன்று கேள்வி எழுப்பி, திருப்பரங்குன்றத்தில் திமுக...

கோமியம்… கோமூத்ரா… இன்னா மேட்டரு பா!

Amazon போன்ற பல இணையதளங்களில் கோமூத்ரம் விற்பனை செய்யப்படுகிறது.

விக்கிரமங்கலம் அங்காள ஈஸ்வரி கருப்புசாமி கோவில் மகா கும்பாபிஷேகம்

கும்பாபிஷேக ஏற்பாடுகளை திருப்பணிகுழு மற்றும் விக்கிரமங்கலம் எட்டூர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

பஞ்சாங்கம் ஜன.21- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் ஸ்ரீசுப்ரமணிய சுவாமி திருக்கோயில்!

கயிலாயத்தில் சிவபெருமான், பார்வதிக்கு பிரணவ மந்திர பொருளை உபதேசம் செய்தார். அப்போது அம்பிகையின் மடியில் இருந்த முருகன் மந்திரத்தை கேட்டுவிட்டார்.