Home உள்ளூர் செய்திகள் பெண்ணிடம் இன்பம்.. யார் முதலில்‌‌.. 5 பேர் போட்டியில் ஒருவர் கொலை! ‌‌

பெண்ணிடம் இன்பம்.. யார் முதலில்‌‌.. 5 பேர் போட்டியில் ஒருவர் கொலை! ‌‌

murder
murder

கோவையில் அழகியுடன் முதலில் யார் உல்லாசமாக இருப்பது என்ற தகராறில் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவர் தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் ரூம் எடுத்து தங்கியிருந்தார். கடந்த 22ஆம் தேதி முதல் தங்கியிருந்த அவர் 28 ஆம் தேதி காலை அறையில் வாயில் ரத்தம் வழிந்தபடியே இறந்து கிடந்தார்.

அறை முழுவதும் ரத்தமாக இருந்தது. அவரது உடலுக்கு அருகே உடைந்த ஒரு ஹெல்மெட்டும் இருந்தது. எனவே அவரை யாரோ கொலை செய்துள்ளது தெரியவந்தது.

இதையடுத்து இந்த மரணத்தை சந்தேக மரணம் என தஞ்சை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் லென்னட் பிராங்களின் தங்கி இருந்த அறைக்கு குடிபோதையில் 4 பேர் வந்து சென்றது தெரியவந்தது. அவர்கள் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த அருண் (23), ஹசன்காதர் (24), பிரவீன் குமார் (18), தினகரன் (22) ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பகீர் தகவல்கள் வெளியாகின.

விசாரணையில் 4 பேரும் சம்பவத்தன்று பிராங்களினின் அறைக்கு சென்றுள்ளனர். அப்போது விடுதியில் இருந்த ஒரு விபச்சார அழகியிடம் முதலில் யார் உல்லாசமாக இருப்பது என்பது தொடர்பாக பிராங்களினுக்கு மற்ற 4 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

அப்போது பிராங்களினை 4 பேரும் தள்ளிவிட்டனர். இதில் அவரது தலை சுவற்றில் மோதி பிராங்களின் இறந்துள்ளது தெரியவந்தது. அவரை கொலை செய்ய வேண்டும் என்பது தங்களின் நோக்கமில்லை என்றும் சும்மா பிடித்து தள்ளியதில் அவர் தலை சுவற்றில் முட்டி இறந்துவிட்டதாகவும் 4 பேரும் வாக்குமூலம் அளித்தனர்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version