சென்னை: நடிகர் ரஜினி காந்த் நடித்து வெளியான லிங்கா படத்தின் பெயர் சமஸ்கிருதப் பெயர் என்றும், அதனை தமிழ்ப் பெயராகக் காட்டி தமிழக அரசின் கேளிக்கை வரி விலக்கு பெற்று மோசடி செய்ததாகவும் சிங்காரவேலன் என்பவர் தாக்கல் செய்த மனு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. ஆனால் மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. இந்நிலையில், நடிகர் ரஜினி காந்த் மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்யக்கோரிய வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன், வழக்கை நாளை ஒத்திவைத்து உத்தரவிட்டார். லிங்கா படத்தின் பெயர் சம்ஸ்கிருதப் பெயர் என்றும், அதனை தமிழ்ப் பெயராகக் காட்டி கேளிக்கை வரி விலக்கு பெற்றதில், தமிழக அரசுக்கு ரூ.20 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றும் கோரி இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
Popular Categories