சென்னை:
AIOBC பொதுச் செயலாளர் ஜே.கே. புதியவன் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்
சென்னை ஐசிஎப் அருகே ரயில்வே தொழிற்சங்க பொதுச் செயலாளர் புதியவன் இன்று காலை வெட்டி கொலை செய்யப்பட்டார்.
வில்லிவாக்கம் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம கும்பல் அவரை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது. இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.