பெரியார் ஈ.வே.ரா., சிலைக்கு காவித் துண்டு, மலர் மாலை அணிவித்து மர்ம நபர் மரியாதை செய்துள்ளார்.
நாமக்கலில் உள்ள பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு மாலை மற்றும் காவி உடையை அடையாளம் தெரியாத நபர்கள் அணிவித்துச் சென்றுள்ளனர். இது அப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மர்ம நபர்களின் இந்தச் செயல் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். முன்னதாக, பெரியார் குறித்து பலத்த கருத்து மோதல்கள் தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.