January 21, 2025, 3:27 AM
23.2 C
Chennai

கொதித்தெழுந்த பெண் பத்திரிகையாளர்கள்; விஜயபாஸ்கர் பகிரங்க மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்

சென்னை: பேட்டி கேட்டுச் சென்ற பெண் நிருபரை அழகாக உள்ளீர்கள் என அமைச்சர் வர்ணித்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.கட்சி தீர்மானம் பற்றி அமைச்சர்  சி.விஜயபாஸ்கரிடம் பெண் நிருபர் கேள்வி கேட்டிருந்தார்.

நிருபர் கேள்விக்கு பதில் தராமல் அவரது கண்ணாடி அழகாக உள்ளது என அமைச்சர் வர்ணித்துள்ளார். பெண் நிருபரை வர்ணித்த சி.விஜயபாஸ்கருக்கு பத்திரிகையார்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் வெளியிட்டுள்ள கண்டனத்தில்,

பெண்கள் எவ்வளவு முன்னேறி வந்தாலும் அவர்களை உடலாக மட்டுமே பார்க்கும் அணுகுமுறையின் வெளிப்பாடாகவே அமைச்சரின் கருத்து இருக்கிறது.

தமிழகத்தின் ஆளுங்கட்சியான அதிமுகவின் தலைமையகத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் என்ன விவாதிக்கப்பட்டது என்ற கேள்விக்கு பதில் கூறாமல் சென்றிருக்கலாம். கருத்து கூற விருப்பமில்லை என்று கூறியிருக்கலாம்.

ஆனால் அதை விடுத்து ” உங்கள் கண்ணாடி அழகாக இருக்கிறது” என கூறுகிறார். ” அதை நான் தினமும் தான் அணிகிறேன். கூட்டத்தில் என்ன விவாதிக்கப்பட்டது ” என கேட்டதற்கு மீண்டும்” இன்று உங்களுக்கு கண்ணாடி அழகா இருக்கிறது” என்றும் மீண்டும் மீண்டும் கூறுகிறார்.

ALSO READ:  திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா சிறப்பு ரயில்!

பணிரீதியாக கேள்வி கேட்கும் பெண் பத்திரிகையாளரிடம் இப்படி ஒரு பதிலை கூறுவதன் மூலம், அதை ஏற்று கொண்டு மறு கேள்வி கேட்க மாட்டார்கள் என்று எதிர்பார்க் கிறாரா அமைச்சர்..?

கட்சியின் முக்கியப் பிரதிநிதிகளில் ஒருவரான அமைச்சர் விஜயபாஸ்கர் நிரூபரின் கேள்விக்குப் நிருபரை அவமதிக்கும் விதமாக பதிலளித்தது கண்டனத்துக்குரியது. பெண் செய்தியாளரிடம் முறையற்ற வகையில் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் பகிரங்க மன்னிப்பு கடிதம் வெளியிட வேண்டும்.

* தமிழ்நாடு பெண் ஊடகவியலாளர்கள் மையம்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.21- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் ஸ்ரீசுப்ரமணிய சுவாமி திருக்கோயில்!

கயிலாயத்தில் சிவபெருமான், பார்வதிக்கு பிரணவ மந்திர பொருளை உபதேசம் செய்தார். அப்போது அம்பிகையின் மடியில் இருந்த முருகன் மந்திரத்தை கேட்டுவிட்டார்.

சபரிமலையில்… காணிக்கை நாணயங்களை எண்ண, கைகொடுத்த ஏற்பாடுகள்!

சபரிமலை மண்டல மகரவிளக்கு மஹோத்சவத்திற்கு முந்தைய நாள், நாணயங்கள், ரூபாய் நோட்டுகள், தங்கம் மற்றும் வெள்ளி உள்ளிட்ட அனைத்தும் எண்ணப்பட்டு இன்று கருவூலம் பூட்டப்பட்டது.

சபரிமலை கோயில் நடை அடைப்பு!

இனி சபரிமலை ஐயப்பன் கோவில் மாசி மாத பூஜைக்காக நடை திறக்கப்படும் சபரிமலையில் இந்த ஆண்டு மகரஜோதி மகர விளக்கு

பஞ்சாங்கம் ஜன.20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...