தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்த மக்கள் நீதி மய்ய தலைவர் நடிகர் கமல்ஹாசன் ஆறுதல் கூறினார்.
அவர்களிடம் ஆறுதல் கூறிய பேசிய கமல், அவர்களின் துயரங்களை கேட்டறிந்த போது கண்கலங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், போன உயிர்களுக்கு எவ்வளவு இழப்பீடு கொடுத்தாலும் ஈடாகாது. யாரையோ திருப்திப்படுத்தவே இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது. மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த காவலர்களை ஏவியது யார் என்ற உண்மை தெரிய வேண்டும் என வலியுறுத்தினார்.