January 25, 2025, 3:58 PM
29 C
Chennai

’நீட்’டால் கிடைத்த மருத்துவ ‘சீட்’! துப்புரவு தொழிலாளி மகனைப் பாராட்டிய ஆட்சியர்!

திருநெல்வேலி: நெல்லை மாநகராட்சி துப்புரவு தொழிலாளியின் மகனுக்கு அரசு மருத்துவக் கல்லுாரியில் பயில வாய்ப்பு கிடைத்ததற்கு மாவட்ட ஆட்சியர் அழைத்து பாராட்டினார்.

திருநெல்வேலி பேட்டை சர்தார்புரத்தை சேர்ந்தவர் பாஸ்கர். நெல்லை மாநகராட்சியில் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றிவருகிறார். இவரது மனைவி சிவசக்தி, வீடுகளில் பணி செய்து வருகிறார். இவர்களது மகன் சுதாகர் (20) நெல்லை சாப்டர் பள்ளியில் 2016-ல் பிளஸ் டூ பயின்றார். 1046 மதிப்பெண் பெற்றிருந்தார். கடந்த ஆண்டு நடந்த நீட் தேர்வில், 161 மதிப்பெண் பெற்றிருந்தார். மருத்துவ சீட் கிடைக்கவில்லை.

மீண்டும் தனியார் நிறுவனத்தில் நீட் பயிற்சி பெற்றவர் 2018ல் நடந்த நீட் தேர்வில் 303 மதிப்பெண் பெற்றார். தற்போது நெல்லை அரசு மருத்துவக் கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., பயிலும் வாய்ப்பு பெற்றுள்ளார்.

தமிழ் மீடியத்தில் பள்ளியில் பயின்ற சுதாகர், ஆங்கிலத்தில் தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளார். துப்புரவு தொழிலாளியின் மகன் சுதாகர், குடும்பம் வறுமையான சூழலிலும் இரண்டு ஆண்டு முயற்சிக்கு பிறகு மருத்துவ சீட் பிடித்தார்.

ALSO READ:  மதுரை மாவட்ட கோயில்களில் கந்த சஷ்டி - சூரசம்ஹாரம்!

இதை அறிந்த நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா, சுதாகரையும் அவரது பெற்றோரையும் தமது அலுவலகத்திற்கு அழைத்து பாராட்டி ஊக்குவித்தார்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

2 COMMENTS

  1. இந்த மாணவன், தான் மருத்துவராகவேண்டும் என்று விடாமுயற்சி செய்து இப்போது மருத்துவர் சீட்டும் பெற்றுள்ளான், அவரின் பெற்றோருக்கும் பெருமை சேர்த்திருக்கிறான், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரின் பாராட்டையும் பெற்றுள்ளான், இது தமிழகத்துக்கு பெருமைதானே ! நீட் தேர்வு மூலம் தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது என்று ஊளையிட்ட தீயசகதிகள், இந்த செய்தி மூலம், இப்போதாவது திருந்தி, நல்ல மக்களையும் கெடுக்காமல் இருக்கவேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

டங்ஸ்டன் அரசியல்; ஸ்டாலின் கருத்துக்கு ராம சீனிவாசன் பதிலடி!

டங்ஸ்டன் திட்டத்தை அரசியலாக்க விரும்பவில்லை அனைத்துக் கட்சியினருமே போராடி இருக்கின்றனர் என்று

பஞ்சாங்கம் ஜன.25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் செய்ததில்… யாருக்கு வெற்றி?!

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் தடுத்ததில் யாருக்கு முழு வெற்றி போகவேண்டும் என்று பெரும் கூத்து நடந்துகொண்டிருக்கிறது.

திருப்பரங்குன்றத்தில் பாஜக., எம்.எல்.ஏ., இந்து முன்னணி தலைவர் ஆய்வு!

இந்துமுன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பாஜக சட்டமன்ற குழு தலைவர் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார்நாகேந்திரன் ஆகியோருடன்

தினசரி பெரியவா தியானம்: நூல் பெற..!

ரா. கணபதி அண்ணா, மகா பெரியவாளின் கருத்துகளைத் தொகுத்து அவற்றை தெய்வத்தின் குரல் என்று ஏழு பகுதிகள் அடங்கிய நூல் தொகுப்பாக வெளியிட்டுள்ளதை அனைவரும் அறிவோம்.