25-03-2023 8:56 PM
More
    Homeஉள்ளூர் செய்திகள்புறநகர் மின்சார ரயிலை கவிழ்க்க சதியா? சிக்கியது ’குடி’ மாணவர்கள்!

    To Read in other Indian Languages…

    புறநகர் மின்சார ரயிலை கவிழ்க்க சதியா? சிக்கியது ’குடி’ மாணவர்கள்!

    velachery train - Dhinasari Tamil

    சென்னை: சென்னை வேளச்சேரி ரயில் நிலையத்தில் கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி அன்று தண்டவாளத்தில் சிமெண்ட் சிலாப்புகள் இருந்தன. இதனை தொலைவிலேயே கண்டுவிட்ட ரயில் ஓட்டுனர், வண்டியை நிறுத்த முயன்றார். இருப்பினும் வண்டி மெதுவாக வந்து சிலாப்புகள் மீது ஏறி இறங்கின. இதனால் அந்த சிமிண்ட் சிலாப்புகள் நொறுங்கின.

    இருப்பினும் ரயில் ஓட்டுநரின் துரித செயல்பாட்டால் பெரும் விபத்து தவிர்க்கப் பட்டது. இந்தச் செய்தி ரயில் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தாங்கள் தினந்தோறும் சென்று வரும் ரயிலில் ஏதாவது அசம்பாவிதம் நேரும் முன்னர் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அச்சத்துடன் கோரிக்கை வைத்தனர்.

    மது போதையில் யாராவது சிமெண்ட் சிலாப்பை தண்டவாளத்தில் வைத்திருக்கலாம் என்று கருதப்பட்டது. இந் நிலையில், இது குறித்து திருவான்மியூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    தொடர்ந்து செப்டம்பர் மாதம் 4 ஆம் தேதி மீண்டும் சிமெண்ட் சிலாப் வைக்கப்பட்டிருந்தது. இதனால் அந்தப் பகுதியை உடனே வந்து பார்வையிட்டார் ஏ.டி.ஜி.பி. சைலேந்திர பாபு. தொடர்ந்து அங்கே  விசாரணை மேற்கொண்டு சுமார் மூன்று கி.மீ.தொலைவுக்கு நடந்தே வந்து அந்தப் பகுதியைப் பார்வையிட்டார்.

    இதனை அடுத்து இந்தச் சம்பவத்தில் ஈடுபடும் குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. ரயிலைக் கவிழ்க்கும் நோக்கத்துடன் சிமிண்ட் சிலாப் வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வந்தது.

    இந்த நிலையில் நண்பர்களுடன் பிறந்த நாள் கொண்டாட பணம் திரட்டுவதற்காக தண்டவாளத்தில் 3 பேர் சிமெண்ட் சிலாப் வைத்தது தெரிய வந்தது.

    சிமெண்ட் சிலாபில் உள்ள கம்பியை விற்று மது குடித்த 3 மாணவர்களை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறார் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்துள்ளனர்.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    sixteen − 5 =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Most Popular

    மக்கள் பேசிக்கிறாங்க

    ஆன்மிகம்..!

    Follow Dhinasari on Social Media

    19,035FansLike
    388FollowersFollow
    83FollowersFollow
    74FollowersFollow
    4,634FollowersFollow
    17,300SubscribersSubscribe

    சமையல் புதிது..!

    COMPLAINT BOX | புகார் பெட்டி :

    Cinema / Entertainment

    நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் மறைவு..

    நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் அஜித்குமாரின்...

    லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை..

    திருவண்ணாமலையில் நேற்று படமாக்கப்பட்ட லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை எதிரொலி ஐஸ்வர்யா ரஜினிகாந்தின்...

    கண்ணை நம்பாதே-படம் எப்படி?..

    அவரவர் குற்றத்திற்கு தண்டனை உண்டு என்கிற கருவை அடிப்படையாக் கொண்டு உருவான படம் கண்ணை நம்பாதே. தான்...

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once..

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once திரைப்படம் .சிறந்த...

    Latest News : Read Now...