மதுரை: எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மதுரை மத்திய சிறைச் சாலையில் இருந்து நன்னடத்தை விதியின் கீழ் 8ஆம் கட்டமாக 5ஆயுள் தண்டனை சிறை வாசிகள் விடுதலை செய்யப் பட்டுள்ளனர்.
ஏற்கெனவே 7 கட்டமாக 168 ஆயுள் தண்டனை சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்நிலையில், 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள ஆயுள் சிறைவாசிகள் சிறை கண்காணிப்பாளர் உத்தரவுபடி நன்னடத்தை விதியின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.