March 17, 2025, 7:59 PM
29.8 C
Chennai

ஆண்டாள் தாயாரை இழிவுபடுத்திய வைரமுத்து இனி நிம்மதியாக தூங்கக் கூடாது…

தாயார் ஆண்டாளை இழிவுபடுத்திப் பேசிய கவிஞர் வைரமுத்து, வாழ்நாள் முழுவதும் நிம்மதியாக துாங்கக்கூடாது என பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா பேசினார்.

சபரிமலையின் புனிதம் காக்கக் கோரி மதுரையில் நேற்று நடந்த பாஜக., மகளிர் அணி யாத்திரையைத் துவக்கி வைத்துப் பேசினார் ஹெச்.ராஜா.

அப்போது அவர் பேசியதாவது… இந்துக் கோவில்களை சான்றோர், ஆன்றோர் கொண்ட வாரியத்திடம் அரசு ஒப்படைக்க வேண்டும். திராவிட இயக்கங்களால் இந்துக் கோவில்களில் நடக்கும் கொள்ளையை நிறுத்தாமல் ஓய மாட்டேன்.

கடந்த 1950ல் சபரிமலை நடையைத் திறக்க மேல்சாந்தி சென்றபோது, உள்ளே விக்ரகங்கள் தீயில் எரிந்து கிடந்தன. அன்றிலிருந்து இன்று வரை சபரிமலையை அபகரிக்க சதி நடக்கிறது. அங்குள்ள கம்யூனிஸ்ட் கட்சியினர் கூட10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட எங்கள் பெண்கள் யாரும் சபரிமலைக்கு செல்ல மாட்டார்கள் என்கின்றனர். ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி பெற்றது போல கேரள அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்தால் மத்திய அரசு ஆதரிக்கும்.

எல்லா சமுதாய சீர்கேடுகளுக்கும், திராவிட இயக்கங்கள்தான் காரணம். தாயார் ஆண்டாளை இழிவுபடுத்திப் பேசிய வைரமுத்து, வாழ்நாள் முழுவதும் நிம்மதியாக இனி தூங்கக் கூடாது. இமேஜ் குறித்து கவலைப்படாமல் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை வெளியில் கூற முன்வந்தது வரவேற்கத் தக்கது. இதற்காக பெண்களை கொச்சைப்படுத்தக் கூடாது. இதனால் அவர்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகள் எதிர்காலத்தில் குறையும் என்று பேசினார்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் காட்டு தர்பார் ஆட்சியை நடத்துகிறது திமுக!

கருத்து சுதந்திரத்தை குழி தோண்டி புதைக்கும் திமுகவின் சர்வாதிகார செயலை இந்து முன்னணி சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம் -

திமுக., அரசின் சாராயக் கடை ஊழல்: போராட்டத்தை தடுத்து பாஜக., தலைவர்கள் கைது!

தேதியே அறிவிக்காமல், திடீரென்று ஓருநாள், நாங்கள் போராட்டத்தை முன்னெடுத்தால் உங்களால் என்ன செய்ய முடியும்? - என்று அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

பாரம்பரிய பூர்வீக கோவில்களின் கட்டமைப்பு, ஆன்மீக அம்சங்கள், தல வரலாறு பயிற்சி பட்டறை!

திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் பாரம்பரிய பூர்வீக கோவில்களின் கட்டமைப்பு, ஆன்மீக அம்சங்கள் மற்றும் தல வரலாறு பயிற்சி பட்டறை நடைபெற்றது.

பஞ்சாங்கம் மார்ச் 17 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மார்ச்-16 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் காட்டு தர்பார் ஆட்சியை நடத்துகிறது திமுக!

கருத்து சுதந்திரத்தை குழி தோண்டி புதைக்கும் திமுகவின் சர்வாதிகார செயலை இந்து முன்னணி சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம் -

திமுக., அரசின் சாராயக் கடை ஊழல்: போராட்டத்தை தடுத்து பாஜக., தலைவர்கள் கைது!

தேதியே அறிவிக்காமல், திடீரென்று ஓருநாள், நாங்கள் போராட்டத்தை முன்னெடுத்தால் உங்களால் என்ன செய்ய முடியும்? - என்று அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

பாரம்பரிய பூர்வீக கோவில்களின் கட்டமைப்பு, ஆன்மீக அம்சங்கள், தல வரலாறு பயிற்சி பட்டறை!

திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் பாரம்பரிய பூர்வீக கோவில்களின் கட்டமைப்பு, ஆன்மீக அம்சங்கள் மற்றும் தல வரலாறு பயிற்சி பட்டறை நடைபெற்றது.

பஞ்சாங்கம் மார்ச் 17 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மார்ச்-16 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஊடகவாதிகளே… திருந்துங்கள் இல்லையேல் திருத்தப்படுவீர்கள்!

ஊடகவாதிகளே ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகத்துறையில் உங்களைப்போல தரமற்ற மனிதர்களால் தான் தேசத்தை அரிக்கும் புற்றுநோய் போல மாறி வருகிறது

தொடர்ந்து ஏமாற்றம் அளிக்கும் வேளாண் நிதிநிலை அறிக்கை!

தொடர்ந்து ஏமாற்றம் அளிக்கும் நிதிநிலை அறிக்கை

பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் வெள்ளி கிழமை மாலை நடை திறக்கப்பட்டது. இன்று காலை பூஜை

Entertainment News

Popular Categories