28-03-2023 8:22 PM
More
    Homeஉள்ளூர் செய்திகள்முதலிரவை தடுத்த அப்பாவை அடித்துக் கொன்ற புதுமாப்பள்ளை வெறிச்செயல்.....!

    To Read in other Indian Languages…

    முதலிரவை தடுத்த அப்பாவை அடித்துக் கொன்ற புதுமாப்பள்ளை வெறிச்செயல்…..!

     

     

    RUBA 2 - Dhinasari Tamil

    “முதலிரவு ரொம்ப முக்கியமா.. முதல்ல மொய்க்கணக்கை குடுத்துட்டு போ” என்று முதலிரவுக்கு செல்ல இருந்த மகனை பெற்ற தந்தை தடுத்து நிறுத்திவிட்டார்.

    அறையில் புதுப்பொண்டாட்டி காத்திருக்க.. அப்பாவை கட்டையால் அடித்து கொன்றே விட்டார் மகன்!

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகில் ஆதிச்சனூர் என்ற கிராமம் உள்ளது.

    இங்கு வசித்து வந்தவர் சண்முகம். இவரது மகன் இளமதிக்கு 2 நாட்களுக்கு முன் அதாவது 14-ம் தேதி தடபுடலாக கல்யாணம் ஆனது.

    அன்றைய தினமே யார் யார், எவ்வளவு மொய் செய்திருக்கிறார்கள் என்று அப்பாவும், மகனும் உட்கார்ந்து ஒரு நோட்டு எடுத்து குறித்து கொண்டு வந்தனர். ஆனால் கணக்கு இடித்தது.

    wedding 1 1 - Dhinasari Tamil

    ஒவ்வொரு முறை கணக்கு சரியா என்று இருவருமே மாறி மாறி பார்த்தனர். அப்போதும் ஒருத்தருக்கும் போட்ட கணக்கு வேறாகவும், வந்த பணம் வேறாகவும் இருந்தது. இப்படியே நேரமாகிவிட்டது… முதலிரவுக்கு மாப்பிள்ளைக்கு டைம் ஆகிவிட்டது.

    அதனால் அப்பாவிடம், காலைல இந்த கணக்கை பார்த்துக்கலாம் என்று சொல்லிவிட்டு, ரூமுக்குள் போக முயன்றார்.

    vettu 2 - Dhinasari Tamil

    உடனே அப்பாவுக்கு கோபமாகிவிட்டது. “இன்னும் இங்க கணக்கு முடியல.. முதலிரவு ரொம்ப முக்கியமா இப்போ.. கணக்கு சரிபண்ணி தந்துட்டு, அப்பறமா ரூமுக்குள்ள போ” என்றார் அப்பா.

    இது வாக்குவாதமாக மாறி.. தகராறாக உருவெடுத்து.. கடைசியில் கட்டையை தூக்கி அடிக்கும் அளவுக்கு போய்விட்டனர்.

    முதலில் கட்டையை எடுத்து மகனை அடிக்க போனது அப்பாதான். இதனால் மகனுக்கு இன்னும் கோபம் அதிகமாகி, அதே கட்டையை திருப்பி வாங்கி அப்பாவின் தலையில் ஓங்கி மடார் என்று ஒரு போடு போட்டுள்ளார். புதமாப்பிள்ளை இளமதி.

    dead bady 4 - Dhinasari Tamil

    இதில் அப்பா கீழே விழுந்தவர்தான்.. எழவே இல்லை. பதறி போன குடும்பத்தினர் 108 ஆம்புலன்சுக்கு போன் பண்ணி வரவழைத்து ஆஸ்பத்திரிக்கு தூக்கிக் கொண்டு ஓடினார்கள்.

    ஆனால் அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் சொன்னார்கள். இது சம்பந்தமாக குடும்பத்தார் உடையார்பாளையம் போலீசில் புகார் தரவும், வழக்கு பதிவு செய்யப்பட்டு மகன் இளமதியை கைது செய்து அழைத்து சென்றனர்!

    jaill - Dhinasari Tamil

    கடைசில கணக்கும் டேலி ஆகலை.. முதலிரவும் போச்சு.. அப்பாவும் செத்துப் போய்ட்டாரு.. இளமதிக்கு இது தேவையா!

    இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    1 COMMENT

    1. புது மாப்பிள்ளை இளமதி. அவருக்கு இல்லை மூலையில் மதி. தேவை நல்ல புத்திமதி. முதலிரவை அனுபவிக்கும் ஓவர் ஆசையில் சொந்த அப்பாவையே கொன்றுவிட்டு சிறை சென்றிருக்கிறார். ஏதோ கண்ணை மறைக்கும் என்பார்கள். இதில் பாவம் புது மணப்பெண் தான். இளமதி கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கலாம். இப்போது நஷ்டம் அவருக்குத்தானே.

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    ten + three =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Most Popular

    மக்கள் பேசிக்கிறாங்க

    ஆன்மிகம்..!

    Follow Dhinasari on Social Media

    19,033FansLike
    388FollowersFollow
    83FollowersFollow
    74FollowersFollow
    4,634FollowersFollow
    17,300SubscribersSubscribe

    சமையல் புதிது..!

    COMPLAINT BOX | புகார் பெட்டி :

    Cinema / Entertainment

    நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் மறைவு..

    நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் அஜித்குமாரின்...

    லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை..

    திருவண்ணாமலையில் நேற்று படமாக்கப்பட்ட லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை எதிரொலி ஐஸ்வர்யா ரஜினிகாந்தின்...

    கண்ணை நம்பாதே-படம் எப்படி?..

    அவரவர் குற்றத்திற்கு தண்டனை உண்டு என்கிற கருவை அடிப்படையாக் கொண்டு உருவான படம் கண்ணை நம்பாதே. தான்...

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once..

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once திரைப்படம் .சிறந்த...

    Latest News : Read Now...