சொத்துவரி உயர்வு தொடர்பாக மறு பரிசீலனை செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. நகர்புற உள்ளாட்சிகளில் உள்ள கட்டிட உரிமையாளர்கள் 01.04.2018 அன்று இருந்து சொத்து வரி அதாவது சீராய்விற்கு முன்பிருந்த சொத்து வரியை செலுத்தினால் போதும் என்று உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.
தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி., வேலுமணி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில்,
உள்ளாட்சிகளில் சொத்து வரியை குறைப்பது குறித்து பரிசீலனை செய்ய குழு அமைக்கப் பட்டுள்ளது.
நிதித்துறை முதன்மைச் செயலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சிகளில் சொத்து வரி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கும், உள்ளாட்சி தேர்தலுக்கும் தொடர்பு இல்லை.
குழுவின் பரிசீலனை முடியும் வரை, பழைய சொத்து வரியே வசூலிக்கப்படும். ஏற்கெனவே கூடுதலாக செலுத்திய வரி, அடுத்தடுத்த ஆண்டுகளில் வரி கணக்கில் வரவு வைக்கப்படும். .. என்றார்.
எனவே உள்ளாட்சித் தேர்தல் நிச்சயம் வருகிறது என்கிற நம்பிக்கை வந்திருப்பதாக, சமூக, அரசியல் மட்டங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன.