சென்னை சீதாலட்சுமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பொது சேவை பணியில் ஈடுபட்டுள்ள அரசு அதிகாரிகள் அமைச்சர்கள் ஆகியோரும் கூட சீன வைரஸ் தாக்குதலில் பாதிக்கப்பட்டு வருகின்றனர் அண்மையில் கோவை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்கள் குர்ஆனோ தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இந்நிலையில் இன்று சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அடுத்து அவர் கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், கொரோனாவுக்கு எதிராக களத்தில் நின்று போராடும் முன்களப் பணியாளர்கள் கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.