- Ads -
Home அரசியல் சட்டவிரோத குடியேறிகளால் தமிழகத்தை சூழ்ந்து இருக்கும் ஆபத்து!

சட்டவிரோத குடியேறிகளால் தமிழகத்தை சூழ்ந்து இருக்கும் ஆபத்து!

சட்டவிரோத குடியேறிகளால் தமிழகத்தை சூழ்ந்து இருக்கும் ஆபத்து குறித்து இந்து முன்னணி எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில், இந்து முன்னணி மாநில தலைவர்

hindumunnani

சட்டவிரோத குடியேறிகளால் தமிழகத்தை சூழ்ந்து இருக்கும் ஆபத்து குறித்து இந்து முன்னணி எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது…

தொழில் நகரமாம் திருப்பூரில் பங்களாதேஷில் இருந்து வந்த சுற்றிய ஊடுருவல்காரர்களை திருப்பூர் மாநகர் காவல்துறையினர் கைது செய்திருப்பது மிகவும் பாராட்டக்கூடிய ஒன்று திருப்பூர் காவல் ஆணையர் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு வாழ்த்துக்கள் .

ஆனால் அதே சமயம் இவர்களை மட்டும் ஊடுருவவில்லை தமிழக முழுவதும் பல்லாயிரக்கணக்கான வங்கதேசத்தவர்கள் சட்ட விரோதமாக ஊடுருவியுள்ளனர். மேலும் தா தனிநபர்களாகவோ குழுக்களாகவோ ஊடுருவ வாய்ப்பே இல்லை திட்டமிட்டு பல்வேறு ஏஜென்ட்கள் மூலம் ஊடுருவவே வாய்ப்புகள் அதிகம்.

ஏனெனில் சில நாட்கள் முன்பு வங்கதேச பெண்களை சென்னை அழைத்து வந்து சமூக வலைதளங்கள் வாயிலாக பாலியல் தொழில் செய்த பங்களாதேஷை சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ALSO READ:  உண்மைகளை மறைத்து வணிகர்களை போராடத் தூண்டும் வணிக சங்கங்களுக்கு கண்டனம்!

அத்தோடு கடந்த வாரம் அஸ்ஸாம் முதல்வர் அவர்கள் பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் தமிழகத்தின் திருப்பூர் கோயமுத்தூர் வரை ஊடுருவல் செய்கின்றனர். இது தொழில் நகரங்களுக்கு மிகப்பெரிய ஆபத்து என எச்சரிக்கை செய்திருந்த நிலையில், பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த ஊடுருவல்காரர்கள் திருப்பூரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பங்களாதேஷில் இருந்து ஊடுருவி தமிழகம் வரை வருவதற்கு பலர் உதவி செய்யாமல் வர முடியாது.

இப்படி சட்டவிரோதமாக வருபவர்களால், பெரிய அளவில் பாதுகாப்பிலோ பொருளாதாரத்திலோ தமிழகத்திற்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
சட்டவிரோதமாக குடியேறியவர்களால் பல்வேறு ஐரோப்பிய நாடுகளே பயங்கரமாக பாதிக்கப்பட்டிருப்பது கண்கூடு.

எனவே தமிழக அரசும் மத்திய அரசும் இணைந்து இவர்களின் பின்புலத்தை தீர ஆராய வேண்டும்.

எல்லைகளை தாண்டி ஆயிரம் கிலோமீட்டர் கடந்து தமிழகம் வரையில் வருபவர்களுக்கு திட்டம் போட்டு கொடுப்பது யாரென கண்டுபிடிக்க வேண்டியது கட்டாயம்..

இவர்களுக்கு உதவி செய்து அழைத்து வரும் ஏஜண்ட்களை கண்டுபிடித்தால் மட்டுமே இதுவரையில் குடியேறியவர்கள் எத்தனை பேர், எங்கெல்லாம் குடியேறி உள்ளனர், குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்களா? என்பதை பற்றிய தகவல் கிடைத்திடும்.

ALSO READ:  ஆட்சியின் அவலத்தைச் சரி செய்யாமல், அப்பாவி மக்களைத் துரத்துவது ஏன்?

ஆகவே தமிழக காவல்துறையும் மத்திய புலனாய்வு அமைப்புகளும் இணைந்து பங்களாதேஷ் ஊடுருவலை முற்றிலுமாக தடுக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் தற்போது பண்டிகை காலம் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு திருப்பூர் காவல்துறை போல துரித நடவடிக்கை எடுத்து
தமிழக மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version