சென்னை: பாஜக மாநில உயர்நிலைக்குழு கூட்டம் கமலாலயத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழக பாஜக., தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன், பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா, மற்றும் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
இந்தக் கூட்டத்தின் போது, திருவாரூர் இடைத்தேர்தலை எதிர்கொள்வது, என்ன முடிவு எடுப்பது, வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் மேற்கொள்ளப் பட வேண்டியவை, பிரதமர் மோடியின் தமிழக வருகையில் செய்ய வேண்டியவை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக ஆலோசிக்கப்படுவதாக பாஜக., வட்டாரங்கள் தெரிவித்தன.