ஈரோடு: 5,8 ஆம் வகுப்புகளுக்கு நடப்பு ஆண்டில் பொதுத் தேர்வு நடத்தப் பட மாட்டாது என்று கூறினார் அமைச்சர் செங்கோட்டையன்.
பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய போது, தமிழகத்தில் நடப்பு ஆண்டில் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படாது. எனவே, பொதுத்தேர்வு குறித்து வரும் செய்திகளால் பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை.
இந்தப் பொதுத் தேர்வுகளை நடத்துவதா வேண்டாமா என்பது குறித்து தமிழக அமைச்சரவை தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறினார்.