ஊரடங்கு தளர்வால்… திறக்கப்பட்டன வரி வசூல் மையங்கள்!
மதுரையில் மாநகராட்சி வரி வசூல் மையங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. கொரோனாவை ஒட்டி, மதுரை மாநகராட்சி சார்பில் செயல்பட்டு வந்த 40 மையங்கள் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டன.
இந்த நிலையில், ஊரடங்கு தளர்த்தப்பட்டதால், மதுரை நகரில் முதற்கட்டமாக இருபது வரி வசூல் மையங்கள் செயல்பட தொடங்கின. விருப்பம் உள்ள பொதுமக்கள் வீட்டு வரி, குழாய், பாதள சாக்கடை வரி, லைசென்ஸ் புதுப்பித்தல், தொழில் வரியை செலுத்தலாம்.
மதுரை மாநகராட்சிக்கு வரியில்லா வருவாய் மூலம் ரூ. 200 கோடி கிடைக்கிறதாம். ஆனால், மதுரைநகரில் பல வார்டுகளில், சாலை வசதி, தெருவிளக்கு வசதி இன்னமும் மேம்படையவில்லை, என, பல குடியிருப்போர் சங்கங்கள் கவலை தெரிவிக்கின்றன.
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை