மதுரை பெரியார் பஸ்நிலையத்தில் பழ வியாபாரம் செய்பவர் ரஜினி பாண்டி. இவருக்கு அண்மையில் நடந்த விபத்தில் காலை இழந்தார்.
இருந்தாலும், மனம் தளராமல் இவர் தன் பிழைப்புக்காக டிரை சைக்கிளில் பழ வியாபாரம் செய்து வருகிறார். இவர் தீவிர ரஜினி ரசிகர். இவரை பற்றி கேள்விப் பட்ட ரஜினி மன்ற மாவட்டச் செயலாளர் ஸ்டாலின், இவருக்கு செயற்கை கால் வாங்கி கொடுத்தத்துடன், பிழைப்புக்காக டிரை சைக்கிளையும் வாங்கி கொடுத்துள்ளார்.
மதுரையில் ரஜினி ரசிகர் ஒருவருக்கு விபத்தில் காலை இழந்தாலும், பிழைப்புக்காக டிரை சைக்கிளில் மதுரை பெரியார் பஸ்நிலையம் அருகே பழ வியாபாரம் செய்து வருகிறார்.
இவர் ரஜினியின் முரட்டு பக்தன் ஆவார். இதனால், இவர் ராஜா சின்னரோஜா படத்துக்கு இரு சக்கரவாகனத்தில் பயணித்தபோது விபத்தில் காலை இழக்க நேரிட்டது.
இருந்த போதிலும், குடும்பத்தை காப்பாற்ற எண்ணியபோதுதான், தூத்துக்குடி மாவட்ட ரஜினி மன்றச் செயலாளர் ஸ்டாலின், இவருக்கு, செயற்கை காலை அளித்தத்துடன், பிழைப்புக்கு டிரை சைக்கிளையும் அளித்து இவரை ஊக்கப்படுத்தியுள்ளார்.
ரஜினி பாண்டி கூறுகையில், மனதில் உறுதியிருந்தால் ஊனம் ஒரு தடையில்லை. நான் என்றும் ரஜினி ரசிகனாகவே இருப்பேன் என்றார்…
- செய்தி : ரவிச்சந்திரன் மதுரை