மதுரை: வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த சென்ற முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகனராவை, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சந்தித்தார்.
முன்னாள் தலைமைச் செயலாளர் ராம் மோகன் ராவ், அமைச்சர் ஆர் வி உதயகுமார் இருவரும் மரியாதை நிமித்தமாக சந்தித்து நலம் விசாரித்துக் கொண்டனர்.
விமானம் மூலம் மதுரை வந்த ராம மோகன ராவ், மதுரையிலிருந்து கட்டபொம்மன் நினைவிடத்தில் மரியாதை செலுத்த கயத்தாறு சென்றார். அப்போது, முன்னாள் தலைமைச் செயலாளர் ராம் மோகன் ராவை வருவாய்த் துறை அமைச்சர் ஆர். பி .உதயகுமார் திருமங்கலம் பைபாஸ் ரோட்டில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டனர்.
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை