April 18, 2025, 11:38 AM
32.2 C
Chennai

தமிழகத்தில் ஆளுநர் மூலம் இரட்டை ஆட்சி நடத்த பாஜக முயல்கிறது-விருதுநகரில் மு.க.ஸ்டாலின்..

பாஜக தமிழகத்தில் ஆளுநர் மூலம் இரட்டை ஆட்சி நடத்த முயல்கிறது என விருதுநகரில் இன்று நடந்த திமுக
முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி பேசினார்.

விருதுநகர்-சாத்தூர் 4 வழிச்சாலையில் உள்ள பட்டம்புதூரில் திமுக சார்பில் முப்பெரும் விழா இன்று நடைபெற்றது. அதில் சிறப்புரையாற்றிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது ,


தமிழகத்திற்கு சரக்கு மற்றும் சேவை வரி மூலம் வரக்கூடிய நிதி வருவாயை ஒன்றிய அரசு பறிக்கிறது. நீட் தேர்வு மூலம் தமிழகத்தின் கல்வி உரிமைய பறித்து வருகிறது. ஏராளமான மக்கள் விரோத திட்டங்களை பாஜக ஒன்றிய அரசு கொண்டு வருகிறது. அதை நாம் ஏற்க மாட்டோம். மேலும், தமிழகத்தில் ஆளுநர் மூலம் இரட்டை ஆட்சி நடத்த ஒன்றிய அரசு முயற்சி செய்து வருகிறது.


தமிழகத்தில் நடப்பது திராவிட மாடல் ஆட்சியாகும். அண்ணாவின் ஆட்சி, எம்.ஜி.ஆர். ஆட்சி, கலைஞர் ஆட்சிக்குப் பின் நடப்பது ஸ்டாலின் ஆட்சியல்ல. இது திராவிட மாடல் ஆட்சியாகும் என அவர் தெரிவித்தார். இந்த ஆட்சிக்கு இந்தியாவுக்கே வழிகாட்டியாக திகழ்கிறது.

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் பாஜக., எம்.எல்.ஏ., இந்து முன்னணி தலைவர் ஆய்வு!

மேலும், திராவிடம் என்றால் அது ஒரு இனம் எனக் கூறுவார்கள். ஆனல், திராவிடம் என்றால் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும். உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற வேறுபாடு இல்லாமல், ஆண்-பெண் பேதமில்லாத, சமத்துவ, சமதர்மத்தை உருவாக்குவது தான் திராவிட மாடல் ஆட்சி.
ஒரு ராணுவ வீரர், நாட்டையும், வீட்டையும் பாதுகாப்பது போல கட்சியையும், ஆட்சியையும் ஒரு சேர வழி நடத்திச் சென்று கொண்டிருக்கிறேன்.

கட்சி இருந்தால் தான் நமது கனவு திட்டத்தை தமிழகத்தில் நிறைவேற்ற முடியும். அதன் மூலம் மக்களுக்கு பயனுள்ளவற்றை செய்ய முடியும்.
இந்த முப்பெரும் விழாவில் கலைஞர் முரசொலி மூலம் தொண்டர்களுக்கு எழுதிய 4047 கடிதங்கள் 54 தொகுதிகளாக தொகுக்கப்பட்டு புத்தக வடிவில் வெளியிடப்பட்டிருக்கிறது. நான் எழுதிய திராவிட மாடல் என்ற நூலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புத்தகங்கள் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு இளைஞரின் கையிலும் கிடைக்கச் செய்ய வேண்டும்.
இந்தியாவில் உள்ள மாநிலங்களில் ஒட்டு மொத்த வளர்ச்சியில் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்கிறது. உள்நாட்டு உற்பத்தியில் மகாராஷ்டிராவுக்கு அடுத்த இடத்தில் தமிழகம் உள்ளது. உலக சுகாதார நிறுவனம் 1000 பேருக்கு ஒரு மருத்துவர் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. ஆனால், தமிழகத்தில் 283 பேருக்கு ஒரு மருத்துவர் உள்ளனர். தனி நபர் வருமானத்தில் தமிழகம் முன்னேறியுள்ளது. இந்தியாவில் தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களில் 21 தமிழகத்தில் உள்ளன. பட்டினிச் சாவு இல்லாத மாநிலமாக தமிழகம் உள்ளது என தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சியில் பள்ளி மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை பி.டி.தியாகராஜன் தொடங்கினார். மதிய உணவுத் திட்டத்தை முதல்வர் காமராஜர் கொண்டு வந்தார். பின்பு, எம்.ஜி.ஆர்.சத்துணவு திட்டமாக அதை மாற்றினார். கலைஞர் வாரத்தில் 5 நாட்கள் சத்துணவுடன் முட்டை வழங்கினார்.

ALSO READ:  திருப்பரங்குன்றம் கோவிலில் ஏப்.7 முதல் மூலஸ்தான பகுதியில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை!

நான் மதுரையில் பள்ளி மாணவர்களுக்கு காலைச் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்துள்ளேன். இந்த நாளை எனது வாழ்நாளில் மறக்கவே மாட்டேன்.
கடந்த 2004 ஆம் ஆண்டு விருதுநகரில் நடைபெற்ற தென் மண்டல மாநாட்டில் கலைஞர் முழங்கினார். 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற்றோம். 2019 ல் விருதுநகரில் நான் முழங்கினேன். இதையடுத்து நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தோம். தற்போது முப்பெரும் விழா விருதுநகரில் நடைபெற்றுள்ளது.

எனவே, 2024 ல் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும் 40 இடங்களிலும் நாம் வெற்றி பெறுவோம். நாற்பதும் நமது. நாடும் நமதே என தெரிவித்தார்.
முன்னதாக, கோவையைச் சேர்ந்த சம்பூர்ண சாமிநாதனுக்கு பெரியார் விருது. கோவை மோகனுக்கு அண்ணா விருது, திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவுக்கு கலைஞர் விருது, புதுச்சேரி சி.பி திருநாவுக்கரசுக்கு பாவேந்தர் பாரதிதாசன் விருது, குன்னூர் சீனிவாசனுக்கு பேராசிரியர் விருது ஆகியவற்றை தமிழக முதல்வர் வழங்கி கௌரவித்தார்.

ALSO READ:  இந்த கொல்லம் - சென்னை ரயில் நேரத்தை மாத்த மாட்டீங்களா?

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திமுக மூத்த நிர்வாகி ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

IPL 2025: ஹைதராபாத் அணியை எளிதாக எதிர்கொண்ட மும்பை அணி!

          ஆட்டநாயகனாக ஆல்ரவுண்டர் வில் ஜேக்ஸ் தான் எடுத்த 2 விக்கட்டுகளுக்காகவும் அதிரடி 36 ரன் களுக்காகவும் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழர்கள் சொத்தை அபகரிக்கத் துடிக்கும் வக்ப் வாரியம்: இந்து முன்னணி கண்டனம்!

இந்துக்களின் பராம்பரிய சொத்துக்களை பாதுகாக்க இந்திய பாராளுமன்றம் நிறைவேற்றிய வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த தமிழக அரசை

IPL 2025: சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

ஐ.பி.எல் 2025 – டெல்லி vs ராஜஸ்தான் டெல்லி - 16.04.2025 சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

IPL 2025: ஹைதராபாத் அணியை எளிதாக எதிர்கொண்ட மும்பை அணி!

          ஆட்டநாயகனாக ஆல்ரவுண்டர் வில் ஜேக்ஸ் தான் எடுத்த 2 விக்கட்டுகளுக்காகவும் அதிரடி 36 ரன் களுக்காகவும் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழர்கள் சொத்தை அபகரிக்கத் துடிக்கும் வக்ப் வாரியம்: இந்து முன்னணி கண்டனம்!

இந்துக்களின் பராம்பரிய சொத்துக்களை பாதுகாக்க இந்திய பாராளுமன்றம் நிறைவேற்றிய வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த தமிழக அரசை

IPL 2025: சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

ஐ.பி.எல் 2025 – டெல்லி vs ராஜஸ்தான் டெல்லி - 16.04.2025 சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IPL 2025: தூள் கிளப்பிய பஞ்சாப் அணி

ந்த ஆண்டு ஐபிஎல் பேட்ஸ்மென்களின் சொர்க்கமாக விளங்குகிறது. 150 ரன்னுக்கும் குறைவான ஆட்டங்கள் வெகு சிலவாக உள்ளன. மட்டையாளர்கள் பந்துவீச்சாளர்களை வெளுவெளு என்று வெளுக்கிறார்கள்.

மு.க. ஸ்டாலினுக்கு மாநில சுயாட்சி ஜுரம்!

முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கு மீண்டும் மாநில சுயாட்சி ஜுரம் பிடித்திருக்கிறது. திமுக தலைவர்களின் உள்ளே இருக்கும் வேறு கோளாறின் அறிகுறியாக அவர்களுக்கு அவ்வப்போது மாநில சுயாட்சி ஜுரம் வரும்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 16 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories