- Ads -
Home ஆன்மிகம் ஆன்மிகச் செய்திகள் இரண்டாம் சோமவாரம்: மதுரை மாவட்ட கோயில்களில் 108 சங்காபிஷேகம்!

இரண்டாம் சோமவாரம்: மதுரை மாவட்ட கோயில்களில் 108 சங்காபிஷேகம்!

மதுரை மாவட்டத்தில், உள்ள சிவ ஆலயங்களில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.

#image_title
#image_title

மதுரை மாவட்டத்தில், உள்ள சிவ ஆலயங்களில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் , சோழவந்தான் பிரளயநாத சிவன் ஆலயத்தில், கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு, 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக, சிவபெருமானும் அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. அதைத்
தொடர்ந்து சிவனுக்கு, 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதை அடுத்து, கோயில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதில், தொழில் அதிபர் எம். வி. எம் .மணி, கவுன்சிலர்கள் எம். வள்ளிமயில், டாக்டர் எம். மருது பாண்டியன், கோவில் நிர்வாக அதிகாரி ச. இளமதி, கணக்கர் சி. பூபதி மற்றும் ஆலய பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

ALSO READ:  நடிகர் கிருஷ்ணாவின் 23வது படம்! கிராமத்துக் கதையாம்!

இதே போல மதுரை அண்ணா நகர் யானைக் குழாய் அருள்மிகு முத்துமாரி ஆலயத்திலும், தாசிலார் நகர் வர சித்தி விநாயகர் ஆலயத்திலும், சௌ
பாக்கிய விநாயகர் ஆலயத்திலும், மதுரை பாண்டி கோவில் ஜெ. ஜெ.நகர் அருள்மிகு வர சித்தி விநாயகர் ஆலயத்திலும், மதுரை அண்ணாநகர் வைகை காலனி, வைகை விநாயகர், மதுரை சாத்தமங்கலம் ஆவின் பாலவிநாயகர் ஆலயத்திலும் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு, சங்காபிஷேகம் நடைபெற்றது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version