மதுரையில் நண்பனை கட்டையால் அடித்துக் கொலை செய்தவர் கைது செய்யப்பட்டார்.
மதுரை அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த பாசுமணி 50 வயது இவர் இன்று காலை மாடியிலிருந்து தவறி விழுந்ததாக படுகாயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் காலை உயிரிழந்தார்,
இந்த நிலையில் அவருடைய நண்பர் நல்லமுத்து கட்டையால் அடித்து கொலை செய்தது தெரியவந்துள்ளது,
அதனை தொடர்ந்து அவனியாபுரம் காவல்துறையினர் நல்லமுத்துவை கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.