திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ஆவிச்சிபட்டியில் உள்ளது அடைக்கலம்காத்த ஐயனார் கோவில். இந்தப் பகுதியில் மிகவும் புகழ்பெற்ற கோயில் இது.
இந்தக் கோயிலில் உள்ள ஐயனார், சின்னகருப்பு, பெரிய கருப்பு உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட சிலைகள் நேற்று இரவு மர்ம நபர்களால் உடைக்கப்பட்டுள்ளது.
இதனால் நத்தம் ஆவிச்சிபட்டி பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. உடைத்தவர்கள் யார் என்பது குறித்தும், சமூகப் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளத இந்தச் சம்பவம் குறித்தும் நத்தம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.