ஹெல்மெட் அணியாத விவகாரத்தில் இனிமேல் இதுபோன்று நடக்காது என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி அளித்தார்.
ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டியதாக அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிராக வழக்கு தொடுக்கப் பட்டது. இதை அடுத்து மதுரை உயர் நீதிமன்ற கிளையில் அவர் மீதான வழக்கில், இனி இது போல் நடக்காது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி அளித்தார்.
இதை அடுத்து அவர் மீது தொடரப்பட்ட ஹெல்மெட் குறித்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.