செங்கோட்டையை அடுத்துள்ள புளியறையில் தமிழ்நாடு இந்து திருக்கோவில் கூட்டமைப்பு சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் செங்கோட்டையை அடுத்துள்ள புளியறை வழிகாட்டும் மாளிகைப்பாறை கருப்பசாமி கோவிலில் வைத்து தமிழ்நாடு இந்து திருக்கோவில் கூட்டமைப்பு தென்காசி மாவட்டம் சார்பில் கொரோனா நோய் தடுப்பு கபசுர குடிநீர் வழங்கல், மாதாந்திர பவுர்ணமி பூஜை, புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் தென்காசி மாவட்டத் தலைவர் பொன்னுத்துரை தலைமை தாங்கினார். மாநிலச்செயலாளர் மணிமகேஸ்வரன், மாவட்ட அமைப்பு செயலாளர் மாரியப்பதங்கராஜ் ஆகியோர் முன்னிலைவகித்தனர். மாவட்ட அமைப்பாளர் அய்யப்பசாமி அனைவரையும் வரவேற்று பேசினார்.
தொடர்ந்து புளியறை பேரூந்து நிறுத்தம் அருகில் வைத்து பொதுமக்களுக்கு கொரோனா நோய் தடுப்பு மருந்து கபசுர குடிநீரை ஐந்தருவி சுவாமி விவேகானந்தா ஆசிரம ஸ்ரீமத் அகிலானந்தா மகராஜ் பொதுமக்களுக்கு வழங்கினார். பின்னர் வழிகாட்டும் மாளிகைப்பாறை கருப்பசாமி கோவிலில் உலக நன்மை வேண்டியும் கொரோனா தொற்று நோய் முற்றிலும் அகன்றிட வேண்டி சுவாமி மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
தொடர்ந்து தமிழ்நாடு இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது. கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.
1.தமிழகத்தில் உள்ள அனைத்து இந்து கோவில்களிலும் இந்து சமய வகுப்புகள் நடத்துவது,
2. தமிழ்நாடு இந்து திருக்கோவில் கூட்டமைப்பிற்கு செங்கோட்டையில் புதிய கட்டிடம் கட்ட ஏற்பாடு செய்வது,
3. புளியறை கருப்பசாமி கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடத்துவது,
4. புளியறை புதிய மகாவிநாயகர் கோவில் மண்டல பூஜை சிறப்பாக நடத்துவது,
5. கூட்டமைப்பிற்கு புதிய உறுப்பினர்களை அதிகமாக சேர்ப்பது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
சிகழ்ச்சிக்கு சக்திசங்கரலிங்கம், மாவட்ட செய்தி தொடர்பாளர் மாரிமுத்து, மாவட்டத் துணைத்தலைவர் மாரியப்பன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் நடராஜன் (முன்னாள் இராணுவ அதிகாரி) இராமையா, சக்திவேல், முத்துமாரியப்ன், பெயிண்டர்செல்லாப்பா, சோமசுந்தரம், டிரைவர் சுந்தர்ராஜன் மாவட்ட இளைஞரணி செயலாளர் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். செயற்குழு உறுப்பினர் முத்துமாரியப்பன் நன்றி கூறினார்.