திண்டுக்கல் மாவட்டம் குரும்பப்பட்டி கிராமத்தை சேர்ந்த முடி திருத்தம் செய்யும் தொழிலாளியின் மகள் கலைவாணி (வயது 12) இரண்டு வருடங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த கிருபாகரன் என்ற 19 வயது இளைஞனால் பாலியல் வன் கொடுமை செய்யப்பட்டு கொலையும் செய்யப்பட்டாள்.
இதனால் சிறையில் அடைக்கப் பட்ட கிருபாகரன் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்துள்ளான்,
இதனைக் கண்டித்து தென்காசி மாவட்டம் முழுவதும் உள்ள முடி திருத்தம் செய்யும் தொழிலாளர்கள் தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.