ரயில்களில் இட நெருக்கடியைத் தவிர்க்க, செங்கோட்டையில் இருந்து, சென்னை எழும்பூர் உட்பட நான்கு முக்கிய நகரங்கள் இடையே, சுவிதா சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
- செங்கோட்டையில் இருந்து மார்ச் 5 மாலை 4:15க்கு இயக்கப்படும் (ரயில் எண்: 82610) சுவிதா ரயில், மறுநாள் அதிகாலை 5:45க்கு சென்னை எழும்பூர் சென்றடையும்
- சென்னை எழும்பூரில் இருந்து மார்ச் 8 இரவு, 10:15க்கு இயக்கப்படும் (ரயில் எண் 82601) சுவிதா ரயில், மறுநாள் காலை 10:30க்கு திருநெல்வேலி சென்றடையும்
- திருநெல்வேலியில் இருந்து மார்ச் 10 மாலை 3:00 மணிக்கு இயக்கப்படும் (ரயில் எண்: 82602) சுவிதா ரயில், மறுநாள் அதிகாலை 3:15க்கு சென்னை எழும்பூர் சென்றடையும்
- சென்னை எழும்பூரில் இருந்து, பிப்.15 மற்றும் மார்ச் 20 ஆகிய நாட்களில் மாலை 5:00 மணிக்கு இயக்கப்படும் (ரயில் எண்: 82629) ரயில், மறுநாள் காலை 9:20க்கு கேரள மாநிலம் கொல்லம் சென்றடையும்.
இந்த ரயில்களுக்கான முன்பதிவு துவங்கியுள்ளது.