மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது…
தேசிய வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டு வங்கி, சேவாபாரதி, சேவாலயா இணைந்து நடத்தும் காணி பழங்குடி மக்களுக்கான ஒருங்கிணைந்த பழங்குடியினர் வளர்ச்சி திட்டம் துவக்க விழா காலை 9 மணிக்கு கொல்லன் விலை தக்கலை பார்த்தசாரதி கோவில் வளாகத்தில் உள்ள பாஞ்சஜன்யம் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெறுகிறது
இதில் ரூபாய் 5.59 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்கள் தேசிய வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டு வங்கி மூலம் மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட உள்ளது
நரேந்திர மோடி அவர்களால் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மாதம் ரூபாய் 3000 ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தின் துவக்க விழா நாளை காலை 10 மணி அளவில் நாகர்கோவில் சுமங்கலி திருமண மண்டபத்தில் வைத்து பொன்ராதாகிருஷ்ணன் பொற்கரங்களால் பயனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது
தாம்பரம் திருநெல்வேலி அந்தியோதயா விரைவு ரயில் நாளை மாலை 3 மணிக்கு நாகர்கோவில் வரை நீட்டிக்கப்பட்டு மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்களால் கொடியசைத்து துவக்கப்பட உள்ளது
கன்னியாகுமரி துறைமுகம் திட்டத்துக்கான சிறப்பு நோக்க நிறுவன துவக்க விழா நாளை மாலை 4 மணிக்கு நாகர்கோவில் ஸ்ரீ லட்சுமி மஹால் திருமண மண்டபத்தில் வைத்து மத்திய நெடுஞ்சாலை போக்குவரத்து கப்பல்துறை கங்கா புனரமைப்பு அமைச்சர் நிதின் கட்கரி அவர்களால் காணொளிக் காட்சி மூலம் துவக்கப்பட உள்ளது
இந்நிகழ்ச்சியில் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் துறைமுக தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்!