செங்கோட்டையில் பலத்த மழை:! 5 மணி நேரம் மின்வெட்டு…!
நெல்லை மாவட்டம், செங்கோட்டையில் இன்று மாலை இடி மற்றும் சூறைக் காற்றுடன் சுமார் ஒரு மணி நேரமாக பலத்த மழை பெய்தது
இதனால் ஒரு சில இடங்களில் சாலை ஓரத்தில் உள்ள மரங்கள் சாய்ந்தன. மேலும் கடைகளில் மேலே அமைக்கப்பட்டுள்ள தகரக் கூரைகள் காற்றில் பறந்தன. இதன் காரணமாக மின் கம்பிகள் அறுந்து சுமார் 5 மணி நேரமாக செங்கோட்டை வட்டாரத்தில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.
தேர்வு நேரத்தில் இந்த மின் வெட்டு காரணமாக மாணவர்கள் படிக்க இயலாமல் பெரிதும் சிரமத்தை அனுபவித்தனர்.