நடந்து வந்தாலே வெற்றியை தருபவர் அமித்ஷா; தற்போது அவர் பறந்து வந்துள்ளார், வெற்றி நிச்சயம் என்று பேசினார் தமிழக பாஜக., தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன்.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் பாஜக., சார்பில் போட்டியிடும் தமிழிசை சௌந்தர்ராஜன், சங்கரப்பேரியில் அதிமுக-பாஜக கூட்டணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், அமித் ஷா நடந்து வந்தாலே வெற்றிதான், அவர் தற்போது பறந்து வேறு வந்திருக்கிறார். எனவே வெற்றி உறுதி என்றார்.
மேலும், தூத்துக்குடி கடலிலும் தாமரை மலரும்; எந்த தியாகம் செய்தாவது வெற்றி பெறுவோம் என்று சூளுரைத்தார் தமிழிசை சௌந்தர்ராஜன். #LokSabhaElections2019