February 7, 2025, 2:31 PM
30.4 C
Chennai

மணப்பாறை அகத்தீஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம்..

மணப்பாறை அருள்மிகு சௌந்தரநாயகி உடனுறை அகத்தீஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது.திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

மணப்பாறையில் சுமார் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த அகத்திய முனிவர், தாயுமான சுகசித்தர் வழிபட்ட திருத்தலமான அருள்மிகு சௌந்தரநாயகி உடனுறை அகத்தீஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் விழா நடைபெற்றுள்ளது. 16 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் விழா என்பதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஆலயம் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சுமார் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலயமான அருள்மிகு சௌந்தரநாயகி உடனுறை அகத்தீஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் விழா இன்று நடைபெற்றுள்ளது. இறைவன் சுயம்பு லிங்கமாக காட்சியளிக்கும் இத்தலம், அகத்திய முனிவர், தாயுமான சுகசித்தர் வழிபட்ட திருத்தலமாகும்.

இங்குள்ள அம்பிகை மகாலெட்சுமி சொரூபமாக தனது இரு கைகளிலும் தாமரை மலரை வைத்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறையால் சில மாதங்களாக ஆதிகாலத்து முறையில் திருப்பணியானது கருங்கல் வர்ண வேலைபாடுகளுடன் புணரமைக்கப்பட்டுள்ளது. ஆலயத்தில் கடந்த திங்கட்கிழமை முதல் யாக வேள்விகள் நடைபெற்று இன்று காலை மங்கள இசையுடன் ஆறாம் காலம் யாக வேள்வி நடைபெற்று கடங்கள் புறப்பாடு நடைபெற்றது. புனித நீர் கும்பங்கள் சிவ பூதகண திருக்கைலாய வாத்திய இசையுடன், மேளத்தாள வாத்தியம், நாதஸ்வர இசையுடன் விமானம் வந்தடைந்தது. அங்கு சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்க விமானம், மூலவர் மஹா குமாபிஷேகம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து அம்பாள் விமானம், பரிவார தெய்வாங்களின் விமானங்கள் புனித நீரால் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து மஹாதீபாராதணை நடைபெற்றது.

பின் மூலவர் மற்றும் அம்பாளுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. 16 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் விழா என்பதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஆலயம் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா கோலாகலம்!

திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா; பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தெப்ப மிதவையில் சுற்றி வந்து சுப்பிரமணிய சுவாமி தெய்வானை உடன் அருள் பாலித்தார்.

பஞ்சாங்கம் பிப்.07 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Ind Vs Eng ODI: தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி!

இந்தியா-இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் – நாக்பூர் – 6 பிப்ரவரி 2025 தொடரை இந்திய அணி வெற்றியுடன் தொடங்கியது

சேகர் பாபு அறநிலையத் துறை அமைச்சராக நீடிக்க தகுதியற்றவர்!

இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத சேகர் பாபு அறநிலையத்துறை அமைச்சராக நீடிக்க தகுதியற்றவர்...

பஞ்சாங்கம் பிப்.06 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா கோலாகலம்!

திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா; பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தெப்ப மிதவையில் சுற்றி வந்து சுப்பிரமணிய சுவாமி தெய்வானை உடன் அருள் பாலித்தார்.

பஞ்சாங்கம் பிப்.07 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Ind Vs Eng ODI: தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி!

இந்தியா-இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் – நாக்பூர் – 6 பிப்ரவரி 2025 தொடரை இந்திய அணி வெற்றியுடன் தொடங்கியது

சேகர் பாபு அறநிலையத் துறை அமைச்சராக நீடிக்க தகுதியற்றவர்!

இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத சேகர் பாபு அறநிலையத்துறை அமைச்சராக நீடிக்க தகுதியற்றவர்...

பஞ்சாங்கம் பிப்.06 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

லட்ச ரூபாய் பணத்தை தவறவிட்டவரிடம் நேர்மையாக ஒப்படைத்த புளியங்குடி நபருக்கு பாராட்டு!

காளகஸ்தி கோவிலில் தவறவிட்ட ரூ.1.50 லட்சம் ரொக்க பணத்தை உரியவரிடம் திரும்ப கொடுத்தவருக்கு செங்கோட்டையில் பாராட்டு.

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து : பெண் உயிரிழப்பு!

https://dhinasari.com/latest-news/308079-வரதநகர-அரக-படடச-ஆலயல-வட-வபதத-பண-உயரழபப.html

பாம்பன் பாலத்தை திறக்க தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

பிரதமர் மோடி ராமேஸ்வரம் நேரடியாக வந்து பாம்பன் பாலத்தை திறக்க உள்ளார்.

Entertainment News

Popular Categories