மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை,, வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரி,, வீ தி லீடர்ஸ் அறக்கட்டளை மற்றும் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
இலவச கண் சிகிச்சை முகாமில் பயனடைந்த மொத்த பயனாளர்கள் எண்ணிக்கை 161 ஆகும். இந்த முகாமின் மூலம் கண்டறியப்பட்டு, இலவச கண் அறுவை சிகிச்சைக்காக மதுரைக்குச் செல்பவர்கள் எண்ணிக்கை 62. இந்த முகாமுக்காக, 17 நபர்கள் கொண்ட மருத்துவ குழு வந்தது குறிப்பிடத்தக்கது.
சிறப்பு விருந்தினர்களாக, Dr. சாந்தராஜார்ஜ் MBBS. (சிறப்பு மருத்துவர் – மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை ), தமிழ்மணி (பஞ்சாயத்து தலைவர் – நாகம்பள்ளி), செங்குட்டுவன் (தாளாளர் – வள்ளுவர் கல்லூரி ), Dr. பிரபாகர் (முதன்மை ஒருங்கிணைப்பாளர் – வீ தி லீடர்ஸ் அறக்கட்டளை ) ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த முகாமில் பங்கேற்று ஒத்துழைப்பு நல்கிய அனைத்து தன்னார்வலர்களுக்கும் நன்றி தெரிவித்தார் வீ தி லீடர்ஸ் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் ந. பாஸ்கர்.
இந்த இலவச கண்சிகிச்சை முகாம், செப்.24 ஞாயிற்றுக் கிழமை புத்தாம்பூர் வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரியில் வைத்து நடைபெற்றது.