நெல்லை : பாவூர்சத்திரத்தில் பொதுமக்கள் சார்பில் கோட்ட துணை கண்காணிப்பாளர் ,ஆய்வாளர் உள்ளிட்ட காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்து வாழ்த்து பிளக்ஸ் வைத்துள்ளனர்
கீழப்பாவூர் ,தென்காசி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திருடிய 3 பேர் கொண்ட கும்பலை பாவூர் சத்திரம் போலீசார் உடனடியாக கைது செய்தனர். அவர்களிடமிருந்து தங்கநகையை மீட்டனர்.
கடந்த வாரங்களில் தென்காசி, ஊத்துமலை ,பாவூர்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் திருட்டு சம்பவங்கள் அரங்கேறிக்கொண்டிருந்தன இது போலீசாருக்கு பெரும் தலைவலியை ஏற்ப்படுத்தியது
பாவூர்சத்திரம் காவலர்கள் இரவு பகல் பாராது தொடர் வாகன சோதனையில் ஈடுபட்டு தேடுதல் வேட்டையினை தீவிரப்படுதியன் பலனாக குற்றவாளிகள் பிடிபட்டனர் பாவூர்சத்திரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் செல்வக்குமார் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர் மேகநாதன் ,தலைமைக்காவலர்கள் அல்போன்ஸ் ,இம்மானுவேல்ஜெயசிங், ,சொரிமுத்து ,உதயசூரியன் ,பாலமுருகன் ,தனிப்படைச் சேர்ந்த மோகன் உள்ளிட்ட போலீசார் பாவூர்சத்திரம் பேருந்து நிலைய பகுதியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு குற்றவாளிகளை கைது செய்தனர் சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினரை பாராட்டும் விதமாக பிளக்ஸ் வைத்து தங்கள் நன்றியை தெரிவித்துள்ளனர்
காவல்துறையினரின் இந்தப் பணி தொடரவேண்டும் என்பதே பொதுமக்களின் விருப்பமாகும்