மரணம் அடைந்து 530 ஆண்டுகளுக்குப் பின்னர் இங்கிலாந்து மன்னர் ஒருவரின் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது. இங்கிலாந்தில் மன்னர் மூன்றாம் ரிச்சர்டு என்பவர், 1485-ம் ஆண்டு, பாஸ்வொர்த் போர்க்களத்தில் கொல்லப்பட்டார். அவரது உடல் அடக்கம் அப்போது முறைப்படி நடக்கவில்லை. இந்நிலையில், கடந்த 3 வருடங்களுக்கு முன் அவரது உடல், கார்கள் நிறுத்துமிடம் ஒன்றின் கீழே கண்டெடுக்கப்பட்டது. இது அவரது உடல்தானா என்பது அவரது வம்சத்தில் வந்த ஒருவரது மரபணுவுடன் ஒப்பிட்டு உறுதி செய்யப்பட்டது. இப்போது 530 ஆண்டுகள் ஆன நிலையில் அவரது உடல் முறைப்படி, அரச மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுகிறது. இதற்காக மன்னரின் உடல் ஓக் மரத்தில் தயாரிக்கப்பட்ட சவப்பெட்டியில் வைத்து, நாளை ஞாயிற்றுக்கிழமை லீசெஸ்டர்ஷயர் பகுதியில் உள்ள கிராமங்களுக்கு எடுத்துச்செல்லப்படுகிறது. பின்னர் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக லீசெஸ்டர்ஷயர் தேவாலயத்துக்கு கொண்டு வந்து வைக்கப்படும். ஆங்கிலிக்கன் திருச்சபையை சேர்ந்த காண்டர்பரி ஆர்ச்பிஷப் தலைமையில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடத்தி, அரச மரியாதையுடன் மன்னர் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது. இங்கிலாந்து ராணி குடும்பத்தின் சார்பில், அவரது இளையமகன் எட்வர்டின் மனைவி கலந்து கொள்கிறார்.
மரணித்து 530 ஆண்டுகளுக்குப் பின் மன்னர் உடல் அடக்கம்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari