
அந்த பகுதியில் உள்ள மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்த போது, அவரது கார் மீது மர்மநபர்கள் சிலர் ஆசிட் வீசினர். இதையடுத்து கார் ஓட்டுநர் காரை நிறுத்தி, கதவை திறந்த போது ஏற்பட்ட ஆசிட் நெடியால், அசன் மவுலானா மற்றும் அவரது நண்பர்கள் மயக்கமடைந்தனர். சம்பவ இடத்துக்கு 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அதில் அசன் ஆரூணை ஏற்றி கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்
இதையடுத்து மருத்துவமனையில் குவிந்த காங்கிரஸ் தொண்டர்கள் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி கோஷம் எழுப்பி ஆர்ப்பாடத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து காவல் துறையினர் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால் அவர்கள் கலைந்து சென்றனர்.மருத்துவமனையில் அசன் மவுலானாவுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.