இன்று நீரஜ் சோப்ரா என்கிற இந்திய ராணுவ வீரர் – இந்தியாவை ஜாவலின் என்கிற ஈட்டி எறிதல் போட்டியில் சுமார் 87.58m தூரம் எறிந்து தங்கப்பதகம் பெற்று நமது நாட்டுக்கு பெருமை சேர்த்து இருக்கிறார் ..
அவருக்கு நமது வாழ்த்துக்களை தெரிவிப்போம் ..
இந்த ஈட்டி எறிதல் என்பது உலகமெல்லாம் பல ஆயிரம் ஆண்டுகளாக இருப்பினும் – சரித்திர பூர்வமாக – recorded history – என்பது Colonel james welsh என்பவர் 1830 எழுதிய MILITARY REMINISCENCES என்கிற புத்தகத்தில் விரிவாக – பாளையக்காரர்களுடன் நடந்த சண்டையில் தமிழ் நாட்டில் பயன்படுத்தியதை பற்றி விரிவான குறிப்புகள் காணப்படுகிறது ..
மருது சகோதரர்கள் – ஆங்கிலேயருடன் நட்பாக இருந்த பொது – வெல்ஷ் – பெரிய மருது உடன் சென்று வேட்டை ஆடிய பொது – மிக பிருமாண்ட – இந்த ஈட்டி எறிதல் – மிக மிக நீளமாக – சுமார் 18-20 அடி நீளம் இருக்கும் என்றும் – தான் எங்கும் இந்த நீள ஈட்டியை கண்டதில்லை என்று எழுதி இருக்கிறார் ..
எழுதிய வேல்ஸ் – ஒரு பிரிட்டிஷ் கர்னல் – உலகில் பல நாடுகளில் சண்டை இட்ட ஒரு வீரர் – அவர் இதை கண்டதில்லை என்று சொல்லுவது – வெறும் வார்த்தையாக இருக்க முடியாது ..
வட நாட்டில் ராஜபுத்ர போர் வீரர்கள் – மகாராணா பிரதாப் அல்லது மேவார் பிரதாப் சிங் (Maharana Pratap), மே 9, 1540 – ஜனவரி 29, 1597) ஓவியம் அவர் கையில் இருக்கும் ஈட்டி இந்த வகையே ஆனால் ..
தமிழர்கள் இதை விட பிருமாண்ட 20 அடி ஈட்டியை நூறு யார்ட் = 91.44 meters .. வீசக்கூடியவர்கள் என்று சொல்லி இருக்கார் வெல்ஷ ..
நமது தமிழர்கள் இன்றைய ஒலிம்பிக் போட்டிகளை விட ஐந்து மீட்டர் அதிகமாகவே ஈட்டியை வீசி இருக்கிறார்கள் ..
அந்த மறவர் குடியினர் எங்கே ??? –
இதை தமிழ்நாடு பூர சேர் பண்ணி விட்டு அடுத்த ஐந்து ஆண்டு கழித்து மறுபடி பதிவிடுவோம் .
விஜயராகவன் கிருஷ்ணன்