spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஸ்டாலின் கோரியதால் ஆவின் பால் விலை உயர்வு ! முதல்வர்

ஸ்டாலின் கோரியதால் ஆவின் பால் விலை உயர்வு ! முதல்வர்

- Advertisement -

cm 1தமிழகத்தில் அனைத்து வகையான ஆவின் பால் விலையும் லிட்டருக்கு ரூ.6 உயர்த்தப்படும் என்று ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், நுகர்வோருக்கு தரமான பால் விற்பனை செய்ய வேண்டும். இதற்காக விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

பசும் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.4,ஆகவும், எருமைப் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.6 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பசும் பால் கொள்முதல் விலை ஒரு லிட்டர் ரூ.28ல் இருந்து, ரூ.32ஆக உயர்ந்துள்ளது.

எருமைப் பால் கொள்முதல் விலை ஒரு லிட்டர் ரூ.35ல் இருந்து, ரூ.41ஆக அதிகரித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பு நாளை ஆகஸ்ட் 19  முதல் அமலுக்கு வருகிறது. இந்த ஏற்றத்தால் 4.6 லட்சத்திற்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் பயன் அடைவார்கள் என கூறப்பட்டுள்ளது.

சேலம் விமான நிலையத்தில் முதலமைச்சர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ஆவின் பால் விலை ஏன் உயர்த்தப்பட்டது என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்து பேசிய அவர், பெரும்பாலான பால் உற்பத்தியாளர் சங்கங்கள் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. பால் வாகனப் போக்குவரத்திற்கான செலவுகள் உயர்ந்துள்ளன.

மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் பால் கொள்முதல் விலை அதிகம். எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று, பால் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது என்று விளக்கம் அளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe