தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்த மாத இறுதியில் வெளிநாடு பயணம் செல்கிறார். ஆகஸ்ட் 28 ஆம் தேதி முதல் செப்டம்பர் 12 ஆம் தேதி வரை அவர் தமிழகத்தில் இல்லாத சூழலில் 14 நாட்கள் முதல்வர் பொறுப்பை யாரிடம் ஒப்படைப்பது என்ற நிலை உருவாகியுள்ளது. தமிழகம் வந்திருந்த அமித்ஷாவிடமும் இது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டிருக்கிறது. இந்த ஆலோசனையின் முடிவில் அமித்ஷாவும் ஓபிஎஸ்-யை சிபாரிசு செய்ததாகவும் செய்திகள் தெரிவித்தன.
ஆனால், ஈபிஎஸ் தனது பொறுப்புகளை யாரிடமும் ஒப்படைக்க வாய்ப்பில்லை என்று தெரிகிறது. அமைச்சர்கள் அவரவர் பொறுப்பை அவரவர் கவனிக்க வேண்டும். முதல்வரின் அமைச்சரவை பொறுப்பை அதிகாரிகள் கவனித்துக் கொள்வார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஈபிஎஸ்-ன் இந்த முடிவு நிச்சயம் ஓபிஎஸ்-க்கு ஏமாற்றத்தை அளிக்கும் என கட்சி தரப்பில் கூறப்படுகிறது.